மேலும் சில கிறுக்கல்கள்


உனக்காக எல்லா காலங்களிலும்
காத்துக்கொண்டிருக்கிறேன்...
மழை நாளில் குடையோடும்
வெயில் நாளில் கொஞ்சம் மழையோடும்...

 --------------------------------------- ************* ---------------------------------------- 

Being Alone is always
Better than being All Alone...,

 --------------------------------------- ************* ---------------------------------------- 

எவ்வளவு காலம் தான்
காத்திருப்பது
நேற்று முடியாத
நாளை தொடங்காத
நாளுக்காக..,

  --------------------------------------- ************* ---------------------------------------- 

Not only Wound heals
Also Scar fades..,


பத்து நாளாக ஏன் எதுவும் எழுதவில்லை என்று ஃபோனிலும் ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும ரேடியோவிலும் டிவியிலும் கேட்ட வாசகர்களுக்காக :) :) :).



[ Read More ]

The Dark Kight Rises - எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா கிரிஸ்டோபர் நோலன் !!

         ஃபேஸ்புக்கிலோ பதிவுலகிலோ எங்கு திரும்பினாலும் எங்கும் பேட்மேன் பற்றிய பேச்சு தான். பேட்மேன் காமிக்ஸ் குறித்தோ, கேரக்டர்கள் குறித்தோ, பேட்மேனின் சைக்காலஜி குறித்தோ, முந்தைய படங்கள் குறித்தோ ப்ளாக் வைத்திருக்கும் அனைவரும் எழுதி தீர்க்கின்றனர். ப்ளாக் இல்லாதவர்கள் தங்கள் Profile Picture ஆகவும் Cover Photo ஆகவும் பேட்மேனையும் கிரிஸ்டோஃபர் நோலனையும் வைத்து ஹைப் ஏற்றுகின்றனர். இந்த அளவுக்கு வேறு எந்த ஆங்கில படத்திற்க்காகவும் தமிழ் இணைய உலகிம் தீப்பற்றி எரிந்ததாக நினைவில்லை. நம்ம ஊர்ல தான் இப்புடின்னா அமெரிக்கால இன்னும் ஓவரா போறாங்க படம் நல்லா இல்லன்னு விமர்சனம் எழுதுன ஒரு வெப்சைட் சர்வரையே ரசிகர்கள் டவுன் பண்ணிடாங்களாம். நெகடிவ் விமர்சனங்கள் வந்தால் ரசிகர்கள் கொலைவெறியாவதை கண்டு Rotten Tomatoes விமர்சன பகுதியையே  படம் வரும் வரை மூடிவிட்டது. நேற்றிரவு IMDB தளத்தில் 9.6 மதிப்பெண்கள் இருந்தது இன்னிக்கு பாத்தா மொத்தம் 5 ரேட்டிங் தேவைன்னு போர்டு மாட்டி இருக்காங்க ஆனா 52 பேர் விமர்சனம் எழுதி இருக்காங்க :))) .


        எல்லாரும் எழுதும் போது நானும் எழுத வேன்டுமா என யோசித்து கொண்டிருக்கும் போது என்னுடைய வாசகர் கிரிஸ்டோபர் நோலன் டிவிட்டரில் போன் செய்து எழுத சொன்னதால் மட்டுமே இந்த உலக மகா பதிவை எழுதுகிறேன் என்பதை மனதில் நிறுத்தி தொடர்ந்து படிக்கவும்  :))). படத்துக்கு இந்த அளவுக்கு ஹைப் ஏற முக்கியமான மூன்று காரணங்கள் கிரிஸ்டோபர் நோலன்,  ஜோக்கராக Heath Ledger மற்றும் மார்கெட்டிங்.

        நோலன் ஒரு மோசமான படமென்ன சுமாரான படம் கூட இன்னும் எடுக்காதவர். படம் பார்க்கும் ரசிகனின் முளைக்கு தொடர்ச்சியாய் வேலை கொடுக்கும் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியர். மிக பெரிய ரசிக கூட்டத்தை சம்பாதித்து வைத்து இருப்பவர் இந்த படத்திற்க்கு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் இவரின் பெயரே ஏதோ மந்திரம் போல ரசிகர்களை தன் வசம் இழுக்க போகிறது. இந்த படத்தை மட்டும் இவரை தவிர வேறு யாரேனும் இயக்கி இருந்தால் யாரும் இப்படி கண்ணில் விளக்கெண்ணை விட்டுகொண்டு எதிர்ப்பார்க்கமாட்டார்கள்.


       அடுத்ததாக ஜோக்கர்.., என்ன பெர்ஃபாமென்ஸ்டா அது !!. நான் டிம் பர்டனின் பேட் மேன் இன்னும் பார்க்கவில்லை ஆனாலும் ஆளானப்பட்ட ஜாக் நிக்கல்ஸனால் கூட இந்த மாதிரி ஒரு வெறிதனமான நடிப்பை கொடுத்திருக்க முடியாது. The Dark Knight வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னமும் பலரும் ஃபேஸ்புக்கிலும், லேப்டாப்களிலும், மொபைலிலும் வால்பேப்பராகவும் ப்ரொஃபைல் பிக்சராகவும் வைத்துள்ளனர். சினிமா வரலாற்றின் மிக சிறப்பாக நடிக்கப்பட்ட கதாபாத்திரங்களை பட்டியலிட்டால் ஜோக்கராய் வாழ்ந்த Heath Ledger-ஐ யாராலும் மிஸ் செய்யமுடியாது.

      
     கடைசியாக வார்னர் பிரதர்ஸின் வைரல் மார்கெட்டிங்.., படம் தொடங்கிய நாள் முதலே உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் எதிப்பார்க்க தொடங்கிவிட்டாலும் ஊரில் உள்ள அனைவருக்கும் பேட்மேன் ஜூரம் வருமளவிற்க்கு ஹைப் ஏற்றிவிட்டது என்னவோ இவர்களின் மார்கெடிங் தான். ஆரம்பத்தில் ஒரு சின்ன டீசர் அப்புறம் சின்ன இடைவெளிக்கு பிறகு ஒரு டிரைலர் அதன் பிறகு மற்றுமொரு டிரைலர் என எதிர்பார்ப்புகளை எகிற செய்தது அதுவும் டிரைலர் என்றால் ஆக்சன் காட்சிகளின் தொகுப்பாக இல்லாமல் சிறு சிறு கேள்விகள் எழுமாறு செய்து ரசிகர்களிடையே விவாதங்களை கிளப்பிவிட்டது முக்கியமாக பேட்மேன் இறுதியில் இறந்துவிடுவாரா இல்லையா என்ற விவாதம். ட்ரைலர் குறித்த கருந்தேளின் விரிவான அலசலை படிக்க இங்கே கிளிக்கவும். இந்த டிரைலர்களோடு Nokia, Cadburys என பல விளம்பரங்களிலும் படத்துக்கான விளம்பரமும் சேர்ந்தே வருகிறது அதிலும் Nokia விளம்பரம் செம..,

        நோலன் இந்த படத்தில் The Dark Knight படத்தை மிஞ்ச வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகும் ஆனால் Dark Knight-ல் தொட்ட உச்சத்தை இதில் தொட்டாலே எல்லோரும் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் எனபது உறுதி. இரண்டு படங்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் படத்தின் வில்லன்கள் ஜோக்கரின் மிகப்பெரிய ஆளுமையை பேனால் ஈடுசெய்யமுடியுமா என்பதே இப்போது 250 மில்லியன் டாலர் கேள்வி. எப்பவும் பரபரப்பாக இயங்கும், மக்களை விளையாட்டு பொம்மைகளாக நினைக்கும், தனக்கு சமமான போட்டியை எதிர்பார்க்கும் ஜீனியஸான ஜோக்கர் ஏற்படுத்தும் மனரீதியான நெருக்கடிகளும் அதை பேட்மேன் எதிர்கொள்ளும் விதமுமே டார்க் நைட்டின் பரபரப்பான திரைக்கதைக்கு காரணமாகும். இத்தகைய பரபரப்பை மிருகபலம் கொண்ட பேனை வைத்து உருவாக்க எத்தகைய காட்சிகளை நோலன் உருவாக்கி இருக்கிறார் என்பது படம் பார்த்தால் மட்டுமே தெரியும். இதில் கொஞ்சம் பிசகி இருந்தாலும் ரசிகர்களை திருப்திபடுத்துவது பிரச்சனையாகி விடும்.

          படத்தின் மீதிருக்கும் அதீத எதிர்பார்ப்பு வசூலுக்கு எந்த அளவுக்கு துணை செய்கிறது அந்த அளவுக்கு படம் திருப்தி தராமல் போக வாய்ப்புள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் இந்த வருடத்தின் சிறந்த படம் இது தான் என்றும் வாழ்கையிலே இப்படி ஒரு இனி வரபோவதில்லை என்றும் பேச தொடங்கிவிட்டனர். அவதாரை முந்த போகிறது Avengers-ஐ தான்ண்ட போகிறது என்று  ஃபோட்டோ எல்லாம் ஃபேஸ்புக்கில் போட ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வளவு எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களை திருப்திபடுத்துவது எந்த இயக்குநருக்கும் நோலனுக்கு கூட சுலபமானதல்ல.

            ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் கூட படம் வசூலில் சாதனை செய்யதான் போகிறது ஆனால் நோலனிடம் எதிர்பார்ப்பது வெறும் வசூல் சாதனையல்ல..., சனிக்கிழமை படம் பார்க்க போகிறேன் அத்தனை எதிர்பார்ப்புகளையும் நோலன் பூர்த்தி செய்வார் என நம்புவோமாக !!
[ Read More ]

நான் ஈ மற்றும் The Immortals of Meluha...,

நான் ஈ:


        பொங்கலப்போ வந்து ஹேப்பி நியூ இயர் சொல்லுற மாதிரி இப்போ என்னடா நான் ஈ பத்தின்னு கேட்டிங்கன்னா ஆன்ஸ்ர் இஸ் வெரி சிம்பிள் இப்போ தான் நா பாத்தேன் :) :).  எல்லா ஃபேண்டஸி கதைகளும் பார்ப்பவனை  எல்லா நொடிகளும் ஏமாற்ற வேண்டும் அதே வேளையில் ஒரு கணம் கூட பார்வையாளன் தான் ஏமாற்றப்படுகிறோன் என்பதை உணர விடவும் கூடாது. இதில் கொஞ்சம் பிசகினாலும் படம் காமெடி ஆகிவிடும் (Remember ஏழாம் அறிவு). இதை மிக சரியாக பின்பற்றி தேவையில்லாம் எந்தவொரு காட்சியையோ பாடலையோ நுழைக்காமல் காட்ட நினைத்த விஷயத்தை ஒரு நிமிஷம் கூட போரடிக்காமல் எடுத்து இருக்கிறார்கள்.

.

        ஈ சண்டை போடுமான்னு யோசிக்க விடாமல் காட்சிகள் நகர்ந்தால் அதற்கு இணையாக சி.ஜி செய்யப்பட்டுள்ளது. ஈ வெள்ளத்தில் இருந்து தப்பிக்கும் காட்சி தவிர அனைத்து காட்சிகளிலும் "நீட்" ஆக இருக்கிறது சி.ஜி வேலைகள். திரைக்கதை மற்றும் சி.ஜிக்கு அடுத்த படி படத்தின் மிக பெரிய பலம் வில்லனாக நடித்துள்ள சுதீப் பலவகையான ரியாக்ஸன்கள் கொடுத்து பயங்கரமாக இம்ப்ரஸ் செய்கிறார். தமிழில் வெளிவந்த So Called பிரமாண்ட படங்களின் பட்ஜெட்டில் பாதிக்கும் குறைவான செலவில் தாயாரிக்கப்பட்ட படம் தரத்தில் அந்த படங்களை விட பல மடங்கு உயர்ந்து நிற்கிறது.  ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்ய போவதாக சொல்லி இருக்கிறார்கள் எதில் வந்தாலும் வெற்றி பெறுவதற்க்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றது. நான் பார்த்தவரையில் இந்திய அளவில் இத்தனை சிறப்பாக கையாளப்பட்ட ஃபேண்டஸி கதையை பார்த்ததாக நியாபகம் இல்லை.

நான் ஈ - நீண்ட நாட்களுக்கு பிறகு திருப்தி தரும் பொழுதுபோக்கு திரைப்படம்.


The Immortals of Meluha :
           
                  5 லட்சம் புத்தகங்கள், விற்றுவிட்டனர், சேதன் பகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டார்,  புராண கதைகளின் மிக புத்திசாலிதனமான வடிவம், இந்தியாவின் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் என்றெல்லாம் அதீத விளம்பரங்களை கேட்டு ரொம்பவே எதிர்பார்ப்போடு தான் The Shiva Trilogy-ன் முதல் புத்தகமான இதை வாங்கி படிக்க தொடங்கினேன்.  சாதாரண மனிதனாக இருந்த சிவன் எப்படி கடவுள்களின் கடவுளாக (மகாதேவ்) மாறுகிறாரென்பது தான் Shiva Trilogy-ன் கதை சுருக்கம்.  இந்த மூன்றில் இரண்டு வெளியாகிவிட்டது கடைசி புத்தகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது.


             கைலாச மலையில் வாழும் சிறு மலைவாழ் குழுவுக்கு தலைவனாக இருக்கும் சிவாவுக்கு சூரிய வம்சத்தவர்கள் ஆட்சி செய்யும் மெஹூலாவிற்க்கு வருமாறு நந்தி மூலமாக அழைப்பு வருகிறது. கைலாச மலையில் உள்ள பிரச்சனைகள் காரணமாக அங்கே தன் மக்களுடன் குடிபெயர்கிறார். மருத்துவம், கட்டிட கலை,  நெசவு என பல துறைகளிலும் உச்சத்தை தொட்டு இருக்கும் அங்கு அனைவரும் சட்டத்தை மதித்து நடப்பதால் அது ஒரு சொர்க்கபுரியாக இருக்கிறது. அங்கு 200 வயதானவர்கள் கூட மிக இளமையுடன் தெரியுமளவுக்கு மருத்துவ வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். சிவாவின் நீல கழுத்தை பார்க்கும் வீரர்கள் இவர் தான் தாங்கள் தேடிவரும் நீலகண்ட் என்றும் அவரால் தான் தங்கள் பிரச்சனையை தீர்க்க முடியும் என்றும், அவருக்காக பல நூற்றாண்டுகளாக காத்திருந்ததாகவும் கூறுகின்றனர். சொர்க்கபுரியாக திகழும் அவர்களுக்கு என்ன பிரச்சனை , சிவன் எப்படி அவற்றில் இருந்து மக்களை காத்தார் என்பதையெல்லாம் நாவல் படித்து தெரிந்து கொள்ளவும்..,

                 நாவலின் ஆசிரியர் அமிஷ் திரிபாதி IIM-ல படித்து இன்வெஸ்ட்மெண்ட் பேங்கராக வேலை பார்த்தவர் சேதன் பகத் போலவே. சேதன் பகத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு IIT மற்றும் IIM ல் படித்தவர்கள், படிப்பவர்கள் எல்லாம் ஏதோ செமஸ்டர் பேப்பர் போல ஒரு நாவலாவது எழுதி விடுகின்றனர் சொல்லி வைத்தாற்ப்போல் அனைத்தும் காதல் கதைகள். அவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் கையில் கிடைத்தால் தயவு செய்து படித்து விடாதிர்கள் அவை எல்லாம் படைப்பாளி இறந்துவிடுகிறான் என்ற பின்நவீனத்துவ விதியை பொய்யாக்கி படிப்பவனையே கொல்லும் வல்லமை பெற்றவை. இந்த புத்தகம் அது போல் இல்லாமல் தொடர்ச்சியாக படிக்க வைக்கிறது என்பதே நமக்கு ஆறுதலாக உள்ளது.


            நாவலின் முக்கிய ப்ளஸ் கதை சொல்லப்பட்டிருக்கும் வேகம் பிற்காலத்தில் பாலிவூட் படமாக்கும் எண்ணத்தை மனதில் வைத்தே எழுதி இருப்பார் போல. இந்து மத புராணங்களில் உள்ள கதாபாத்திரங்கள் எல்லாம் மனிதர்களாக அவர்களின் சக்தியாக சொல்லப்பட்ட விஷயங்கள் கதாபாத்திரங்களாகவும் இருப்பது படிப்பதற்க்கு நன்றாக இருக்கிறது. ரொம்பவே எளிமையான ஆங்கிலம் சிலருக்கு நிறையாகவும் சிலருக்கு குறையாகவும் தோன்றலாம்.
           
          சமகால மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் உரையாடல்களும் அப்படியே இருப்பது பல நேரங்களில் கடுப்பை கிளப்புகிறது. பல்லாயிரகணக்கான வருடங்களுக்கு முந்தைய கதையில் Damn it, Shit, Okay, Hello, "What the Hell" போன்ற வசனங்கள் நிரம்பி இருக்கின்றன. விதவையான சதியை  (பார்வதி) சிவன் திருமணம் செய்து கொள்வதை போல் கதை சொல்லப்படுகிறது அதுவும் எந்த ஆட்சேபனையும் இன்றி ஏற்றுகொள்ளப்படுகிறது. பண்டைய இந்தியாவில் விதவை திருமணம் வழக்கத்தில் இருந்த்தாக கேள்விப்பட்டதில்லை அதுவும் பார்வதியின் இரண்டாம் கணவர் சிவன் என்பதையும் எங்கும் கேள்விப்பட்டதில்லை. இன்றைய சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையான வர்ணாசிரம பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் திறமையின் அடிப்படையில் இருப்பதாக சொல்லப்படுவது ஏற்கக்கூடியதாய் இல்லை. மொத்த நாவலுமே கிளஷேக்கள் நிறைந்த்தாய் இருக்கிறது கொஞ்சம் படங்கள் பார்த்தவராகவோ புத்தகங்கள் படித்தவராகவோ இருந்தால் நாவலில் வரும் எதிர்பாராத திருப்பங்களை கூட சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.
          
         மொத்ததில் முதல் பத்தியில் சொன்ன பில்டப்புகளை நிறைவேற்றியதா என்றால் இல்லை என்பதே பதிலாகும் ஆனாலும் ஒரு ஹிந்தி படம் பார்த்த உணர்வை தருகிறது நாவல் சீக்கிரத்திலே படமாக வரும் வாய்ப்பும் அதிகம் :).
[ Read More ]

மிஷ்கினின் "முகமூடி" அல்லது சோடா மூடி : ஒரு புரட்சியின் தொடக்கம்

 உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு மனம் 
கொதித்து பதிவோ ஸ்டேடஸோ டிவிட்டோ போட்டால் நீயும் எனக்கு நண்பனே..,
 - பிரபல பதிவர் ..,

        எல்லாருக்குமே சூப்பர் ஹீரோ ஆகணும்ன்னு ஒரு கனவு, லட்சியம், வெறி எல்லாம் உண்டு  ஆனால் அதற்க்கான வாய்ப்புகள் யாருக்கும் அமைவதில்லை. மனைவியிடம் செல்போனை கொடுக்கும் அரை நொடி நேரத்தில் ஆபிஸ் ஃபிகர் அனுப்பிய மெஸேஜை டெலீட் செய்வது, மேனேஜர் திரும்பும் கணப்பொழுதில் ஃபேஸ்புக்கில் வந்திருக்கும் தோழியின் சாட்க்கு பதில் சொல்வது என சிறு சிறு சாகசங்களோடு சூப்பர் ஹீரோ கனவு நீர்த்துவிடுகிறது. நாம தான் சூப்பர் ஹீரோ ஆக முடியல சூப்பர் ஹூரோ படம் பார்த்தாவது அந்த வெறிய தீத்துக்கலாம்ன்னு பாத்தா அதுவும் முழு திருப்தி கொடுக்கல.  இது வரைக்கும் உள்ள எல்லா சூப்பர் ஹீரோக்களும் நியூ யார்க் , வாஷிங்டென் மாதிரி ஊர தான் காப்பாத்துறாங்க நம்ம சென்னை , மதுரை பக்கம் எட்டி கூட பாக்க மாட்டானுங்க அட அத கூட பொறுத்துக்கலாம் ஆனா அவுனுங்க டாவடிக்கிற பொண்ணுங்ககெல்லாம் ஆண்டியாவே இருக்காங்க என்ன கொடுமைடா !!!. இப்படி ஒரு சூப்பர் ஹீரோவுக்கு கூட வெள்ளையனை பார்த்து ஏங்குவது தமிழனை பிடித்த சாபமன்றி வேறொன்றுமில்லை.

         636 பேரை தனியா நின்னு சாமாளிக்கிற நம்ம ஹீரோல்லாம் என்ன சாதாவா சூப்பர் ஹீரோ இல்லையான்னு சில விஷமிகள் கேள்வி எழுப்பலாம். தமிழன் முன்னேறுவதில் எரிச்சலடையும் எத்தர்களின் முகமூடி விரைவில் கிழியும் என்பதை மனதில் நிறுத்தி அவர்கள் சொல்வதற்க்கு செவிமடுக்காமல் மேற்கொண்டு படிக்கவும். தமிழனின் இன்னலை உணர்ந்து சென்னையை காப்பற்ற, தாமிரபரணியை உறைய வைக்க, இருபது வயது ஃபிகரை டாவடிக்க நமக்கே நமக்கென ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்க வேண்டும் என நினைப்பவர்கள் பதிவின் ஆரம்ப வரிகளை படித்துவிட்டு தொடரவும். சூப்பர் ஹீரோ படமெடுப்பது ஒண்ணும் அத்தனை சுலபமான வேலை கிடையாது பல தகுடுதனங்கள் செய்ய வேண்டி உள்ளது. முதலில் போஸ்டர் தயாரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் மற்ற ஈரவெங்காயங்களை பின்னால் உரிக்கலாம்.

         முதலில் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். உதாரணமாக உங்களுக்கு பேட்மேன் ரொம்ப பிடித்து இருந்தால் அவரையே வைச்சுக்கலாம் ஆனால் அப்படியே பயன்படுத்தினால் ஹாலிவூட்காரன் கண்டுபிடிச்சான்னா டவுசர கழட்டிருவான் சோ யூ மஸ்ட் பீ வெரி கேர்ஃபுல் இன் தீஸ் ஸுட்டிவேஷன்ஸ் அதாவது சூதானமா இருக்கனும் மாமே.., அது நாமே புதுசா கண்டுபிடிச்ச சூப்பர் ஹீரோன்னு டகில் விடுற அளவுக்கு மாற்றங்கள் செய்ய வேண்டும் அதுக்காக முளைய ஓவரா கசக்க வேண்டியதெல்லாம் இல்ல உத்து பாத்து யாராவது கண்டுபிடிச்சிட்டாலும் பேசி சமாளிக்க தெரியனும் அது தான் ரொம்ப முக்கியம் . கறுப்பு கலர்ல சட்டை போட்டா காத்து கறுப்பு எதாவது அடிக்கும்ன்னு சொல்லி பேட்மேன் காஸ்ட்யூம் மொத்ததையும் ஊதா கலருக்கும் மாத்தனும். அதுக்கப்புறம் பேட்மேனின் தலைக்கு மேல் கொம்பு போலிருக்கும் காதுகள் எதுக்கு தேவையில்லாம இது போல ஹீரோக்களை உருவாக்கும் நமக்கு ஏற்க்கனவே தலைக்கு மேல் கொம்பு உள்ளதால் அந்த கொம்புகளை வெட்டி வீசவும் அவ்வளவு தான் சூப்பர் ஹீரோ தயார்.

     அடுத்து போஸ்டர் தான். புது சூப்பர் ஹீரோவுக்கு பேட்மேனை தேர்ந்தெடுத்திருந்தால் போஸ்ட்ருக்கும் அதையே தேர்ந்தேடுப்பது தான் புத்திசாலிதனம் சந்தேகமிருந்தால் பிரபல பதிவர்களிடம் விசாரித்து கொள்ளவும்.

       இது தான் நீங்கள் தேர்தெடுத்த ஒரிஜினல் போஸ்டர் என்றால் பின்வரும் மாற்றங்களை வரிசையாக செய்யவும்..,

1) போன பத்தியில் சொன்னது போல் பேட்மேனின் உடையின் கலரையும் தலையில் உள்ள கொம்பு காதையும் நீக்கி விடவும்..,

2) இடதுபுறமாக பார்த்தபடி இருக்கும் ஹீரோவை அபவ்டர்ன் சொல்லி வலதுபுறமாக திருப்பவும்..,

3) மஞ்சள் கலரில் இருக்கும் பேக்கிரவுண்ட் வானத்தையும் ஊதா கலருக்கு மாற்றி கொள்ளவும்..,

4)  பேட்மேனுக்கு கீழ் இருக்கும் வவ்வால்களை துரத்தி விடவும்..,

5) ஹீரோவின் முகத்திற்க்கு ஜூம் போகவும்..,

6) ஒரிஜினல் படத்தின் பெயரை அழித்து விட்டு உங்கள் படத்தின் பெயரையும் அந்த இயக்குநர் பேரை அழித்துவிட்டு உங்கள் பெயரையும் எழுதி கொள்ளவும்..,

அவ்வளவு தான் முடிந்தது உங்களுக்கான சூப்பர் ஹீரோ கிடைத்து விட்டார் :))


எச்சரிக்கை : இது போஸ்டர் உருவாக்குவது எப்படி என்பதை விளக்கும் டெக்னிக்கல் பதிவு மட்டுமே நீங்களாக எதாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு கம்பேனி பொறுப்பாகாது..,

Courtesy :  சமீபத்தில் திரு,மிஷ்கின் அவர்கள் கொடுத்த பேட்டி ஒன்றில் இருந்து பதிவின் தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது.
                  
தேவைப்பட்டால் தொடரும்...,
      
[ Read More ]