Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

ஆஸ்கர் நாமிநேஷன்ஸ் 02 - Silver Linings Playbook

            தனிமை மிக கொடுமையானது யாரும் விரும்பாதது யாருக்கும் நிகழக்கூடாதது. எத்தனையோ மனிதர்கள் சுற்றி இருக்கும் போதும் ஒருவன் தனிமையில் இருப்பது என்பது விருப்பம் அல்ல தேர்வு அல்ல அது ஒரு தேடலின் துயர முடிவு மானுடத்தின் பெருந்தோல்வி மொழியும் நாகரீகமும் வெட்கி தலைக்குனியும் தருணம். தனிமையை விரும்புவதாய் சொல்லும் அனைவரும் தங்கள் பாசாங்குகளையும் போலித்தனங்களையும் விலக்கி வைத்த பின் ஏற்படும் உண்மையான உறவை வென்றிடாதவர்கள்.  உண்மையில் யாருக்கும் தனிமை விதிக்கப்படுவதல்ல அனைவரும் பாசாங்கற்ற முகத்தையும் மனதையும் அவர்களுக்கே காட்டிடும் யாரோ ஒருவரை ஒரு முறையேனும் சந்திக்க தான் செய்கிறார்கள். பெரும்பாலும் அந்த சந்திப்புகள் மட்டுமே உறவை ஏற்படுத்துவது இல்லை எதாவது தடையோ காரணமோ கண்டுபிடித்து அதற்கு ஒரு பெயரும் வைத்து ஒதுங்கியே இருக்கிறார்கள். ஒரு புன்னகை மறுக்கப்பட்டிருக்கலாம் ஒரு கடும் பார்வை வீசப்பட்டிருக்கலாம் எப்போதேனும் வார்த்தைகள் கட்டுபாட்டை இழந்திருக்கலாம் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உங்களுக்கானவரை நோக்கி செல்லுங்கள் வாழ்கை வசந்தமாகட்டும்..,



    எல்லா ஆஸ்கரிலும் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கறுப்பு குதிரையாக எதாவது ஒரு படம் நிறைய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஆச்சர்யப்படுத்தும். இந்த கறுப்பு குதிரைகள் சில சமயம் பயங்கரமாய் இம்ப்ரஸ் செய்து ஆச்சர்யப்படுத்தும் சில படங்கள் காசு கீசு குடுத்து வந்துருப்பாய்ங்களோன்னு சந்தேகப்படும் அளவிற்கு மொக்கை போடும் அவற்றுள் இந்த திரைப்படம் முதல் வகையை சேர்ந்தது. ஆஸ்கர் விருகளுக்கான பரிந்துரைகளை பார்த்த போது மற்ற படங்களின் பெயரேனும் தெரிந்து இருந்தது  இதன் பெயரே அப்போது தான் கேள்விப்பட்டேன் அதே நேரத்தில் பார்த்த மாத்திரத்தில் பிடித்து போய்விட்டது. மூணு, ஆரோகணம் ஆகிய படங்களின் மூலம் நமக்கு அறிமுகமான Bi-Polar Disorder உள்ள நாயகன் அவருக்கு ஏற்ற(!!) பெண்ணை கண்டு வேற்றுமைகளை கடந்து இணைந்தார் என்பதை படுஜாலியாகவும் சுவாரஸியமாகவும் சொல்லி இருக்கும் படம் தான் Silver Linings Playbook.


          மனைவியுடன் இருந்த ஆணை தாக்கிவிட்டு Bi-Polar Disorder வியாதிக்காக மனநல மருத்துவமனையில் எட்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார் பிராட்லி ஹூப்பர். அவர் முழுமையாக குணமாவதற்க்கு முன்னதாகவே நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வீட்டிற்க்கு அழைத்து வந்துவிடுகிறார் அவருடைய அம்மா. அவருடைய மனைவியை 500 அடிக்கு தூரத்திற்கு குறைவாக நெருங்க கூடாது என்ற Restraining உத்தரவுடன் வீட்டிற்க்கு வரும் பிராட்லி அவருடைய முழுநேர வேலையாக மனைவியை தேடுகிறார். சமீபத்தில் கணவனை இழந்த ஜெனிஃபர் லாரன்ஸை ஒரு விருந்தில் சந்திக்கிறார். கணவன் இழந்த சோகத்தை குறைப்பதற்க்காக டான்ஸ் பயிற்சியில் ஈடுப்படும் ஜெனிஃபருக்கு ஏகப்பட்ட ஆண்களுடன் பழக்கம் இருக்கிறது அதன் காரணமாக வேலையையும் இழக்கிறார். பிராட்லியின் அப்பாவாக வரும் ராபர்ட் டீ நீரோ ஒரு வெறித்தனமாக பெட் கட்ட கூடிய ஃபுட்பால் வெறியராக வருகிறார் அதுமட்டுமில்லாமல் அவருடைய மகன் ஒரு குறிப்பிட்ட சோஃபாவில் உட்கார்ந்து பார்த்தால் அவருடைய அணி வெல்லும் என காமெடியான நம்பிக்கைகள் வேறு உண்டு.

          தன்னுடன் நடன போட்டியில் பங்கு பெறுவதாக இருந்தால் பிராட்லியை அவருடைய மனைவியிடன் சந்திக்க வைப்பதாக சொல்லி  பயிற்சிக்கு வர வைக்கிறார். பயிற்சியில் எப்போதும் இருப்பதால் சரிவர அப்பாவுடன் சேர்ந்து பேட்ச் பார்க்க முடிவதில்லை. பயிற்சி காலத்தில் இருவருக்கு இடையிலும் ஒரு அழகான உறவு ஏற்படத் தொடங்குகிறது. ஒரு முக்கிய போட்டியின் போது மைதானதிற்கு வெளியே சண்டை போட்டதால் மேட்சிற்கு போகாமுடியவில்லை. அன்றுடீ நீரோ நிறைய பணத்தை தோற்கிறார். இழந்த பணத்தை மீட்பதற்க்காக மொத்த சொத்தையும் ஒரு போட்டியில் பந்தயம் கட்டுகிறார். அந்த போட்டியில் அவருடைய அணி வெல்வதோடு பிராட்லியும் ஜெனிஃபரும் கலந்து கொள்ளும் போட்டியில் பத்திற்க்கு ஐந்து மதிப்பெண்ணாவது வாங்கினால் டீ நீரோ இழந்த அத்தனையும் தருவதாக அவரிடம் பெட் கட்டும் நண்பர் வாக்கு கொடுக்கிறார். அந்த முக்கிய போட்டி என்ன ஆனது ? அந்த டான்ஸ் போட்டி என்ன ஆனது என்பதெல்லாம் உங்களுக்கே தெரியுமென்றாலும் படத்தில் பாத்துகோங்க.


        திரைக்கதை தான் எந்தவொரு படத்திற்க்கும் அடிநாதம் என்றாலும் அதை நடிக்கும் நடிகர்களின் நடிப்பே அதன் முழுமையான வடிவத்தை கொடுக்க முடியும். அதற்க்கு உதாரணமாக இந்த படத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரம் கூட சோடை போகாமல் இந்த படத்தில் நடித்த எல்லோருமே பெர்ஃபாமென்ஸில் பின்னி எடுத்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர்  ‘The Fighter’ படத்தை இயக்கிய David O. Russell அந்த படத்துகாக Christian Bale ஆஸ்கர் விருது வாங்கியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். உறவுகளுக்கு இடையில் ஏற்படும் மெல்லிய உரசல்கள் அந்த உரசல்களின் ஊடே வெளிப்படும் அன்பு, அட்டகாசமான உரையாடல்கள் குறிப்பாக ஒன்லைனர்கள் என ஃபைட்டர் படத்தில் எதெல்லாம் ஈர்த்ததோ அதுஎல்லாமும் இந்த படத்திலும் இருக்கிறது ஆனால் அத்தனையும் வேறு மாதிரி இருக்கிறது.

        Bradley Cooper கதையின் நாயகன் (:P) பேட்டாக நடித்து இருக்கிறார். மனைவியை நினைத்து ஏங்குவது, எப்படியேனும் அவரிடம் பேசிவிட வேண்டும் என தவிப்பது, அதீதமாய் கோபப்படுவது என கதாப்பாத்திரத்திற்க்கு எவ்வளவு நியாயக் செய்ய வேண்டுமோ அவ்வளவு நியாயம் செய்து இருக்கிறார் ஆனாலும் ரெண்டு பேர் சுலபாக அவரை ஓவர் டேக் செய்துவிடுகின்றனர் ஒருவர் படத்தின் ஹீரோயின் Jennifer Lawrence மற்றொருவர் அவருடைய அப்பாவாக நடித்து இருக்கும் Robert De Niro. Hunger Games படத்தில் உம்மனாமூச்சி Katniss ஆக நடித்தவர் இதில் அதற்கு 'Perfectly Opposite'  கதாப்பாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். மனிதில் பட்ட எதையும் கொஞ்சமும் தயங்காமல் பேசுகிற, அடுத்தவர்களை அதிகாரம் செய்பவராக எல்லா ஆண்களுடனும் சுற்றி கொண்டிருப்பவராக ஓவர் ஆக்டிங் செய்வதற்க்கான சகல சந்தர்ப்பங்கள் இருந்தும் அப்படி ஏதும் நிகழாமல் நடித்திருக்கிறார்.ஏற்கனவே இந்த 14 விருதுகள் வாங்கிவிட்ட நிலையில் போட்டி கடுமையாக இருந்தாலும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


        உலகின் தலை சிறந்த நடிகர்களுள் ஒருவரான Robert De Niro பிராட்லி ஹூப்பரின் தந்தையாக நடித்து இருக்கிறார். தந்தூரி சிக்கனை தயிர் சாதத்துடம் வைத்து சாப்பிடுவது போல Righteous Kill, New Year's Eve மாதிரியான மொக்கையான படங்களில் தான் சமீபகாலமாக டீ நீரோவை பார்க்க முடிந்த்து. அதுமாதிரி இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரின் நடிப்பு திறமையை வெளிப்படும் விதமாய் நல்ல கதாப்பாத்திரத்திலும் நல்ல படத்திலும் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. Philadelphia Eagles அணியின் (Rugby or American Football) அதிதீவிர ஆதரவாளராக எப்பவும் அதை பற்றியே பேசிக்கோண்டிருக்கும் ஸ்டேடியத்திற்க்குள் நுழைய தடை விதிக்கப்படும் அளவிற்க்கு வெறித்தனமாக தனது அணிக்காக சண்டை போடக்கூடிய கதாப்பாத்திரம் வயசானலும் சிங்கம் தான் மாதிரி அசால்ட்டாக நடித்திருக்கிறார். டீ நீரோ வுக்கும் சிறந்த துணை நடிகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் கடும் போட்டியின் காரணமாக கிடைப்பது கடினம் தான் என்றாலும் கிடைத்தால் ரொம்ப சந்தோஷம்.

      சிறந்த திரைப்படம் உட்பட எட்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. பரிந்துரையிலையே சில சாதனைகளையும் செய்தும் இருக்கிறது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை என நடிப்புக்காக வழங்கப்படும் நான்கு விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது கடந்த முப்பது வருடங்களில் இந்த சாதனையை செய்யும் முதல் திரைப்படம் இது தான் அதுமட்டுமில்லாமல் ஆஸ்கர் வரலாற்றிலேயே எந்த படமும் இந்த இந்த நான்கு விருதுகளையும் வென்றதில்லை ஆகவே இந்த படம்  இந்த நான்கு விருதுகளையும் வாங்கும் பட்சத்தில் அது ஆஸ்கர் வரலாற்றில் புதிய சாதனையாக இருக்கும். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை (Adapted or Original) இந்த ஐந்து விருதுகளையும் சேர்த்து Big Five என்று சொல்லுவார்கள். இந்த ஐந்து விருதுகளையும் ஒரே படம் வெல்லும் அரிய நிகழ்வு மூன்று முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. இந்த படமும் இந்த ஐந்து விருதுகளுக்காகவும் நாமிநேட் செய்யப்பட்டுள்ளது இதற்கு முன்பாக 2004-ல் Million DOllar Baby தான் இந்த 5 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது ஆனால் மூன்றை தான் வெல்ல முடிந்தது.

             சிறந்த திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதை வெல்வதற்க்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும் பரிந்துரை பட்டியலில் கறுப்பு குதிரையாக வந்தது போல் விருது பட்டியலிலும் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் வந்து ஆச்சர்யபடுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்க்கு இல்லை :).
[ Read More ]

ஆஸ்கர் நாமிநேஷன்ஸ் 01 - Argo

         ஆயிரம் குறைகள் சொன்னாலும் அதன் உள்ளரசியல் குறித்து விமர்சித்தாலும் வருடா வருடம் ரொம்பவே எதிர்ப்பார்க்க வைக்கும் விஷயமாகவே இருக்கிறது ஆஸ்கர் விருதுகள். எல்லா வருடங்களையும் போலவே எதிர்ப்பார்த்த படங்கள் பரிந்துரைக்கப்படாமலும் அதுவரை பெயர் கூட கேள்விப்படாத படங்கள் பரிந்துரைக்கப்படுவதும் இந்த வருடமும் நடந்தே இருக்கிறது. நான் ஆஸ்கர் பற்றி எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஆஸ்கர் விருது கொடுக்கத்தான் போகிறார்கள் இருந்தாலும் ஒரு ஆர்வ மேலிட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட படங்களை பற்றி எழுதப்போகிறேன் படிச்சிட்டு படத்தை பாருங்க ரொம்ப கஷ்ட்ட்ட்ட்டமா இருந்தா படத்தை மட்டுமாவது பாத்துடுங்க :) .



         "வரலாறு என்பது உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்படும் புனைவு" எம்.ஜி.சுரேஷின் நாவல் ஒன்றில் படித்த வரிகள். இந்த விதியை மிக லாவகமாகவும் அதிகமாகவும் உபயோகப்படுத்தும் மற்றொரு இடம் என்றால் அது நிச்சயம் ஹாலிவூட் தான். ஒரு சம்பவத்தையோ கதையையோ படமாக்க முடிவு செய்யும் பட்சத்தில் அதை திரைக்கதையாக மாற்றி எழுதும் வேளையில் நிறைய மாற்றங்கள் செய்வார்கள். திரைக்கதையை ஹாலிவூட்டிற்க்கே உண்டான வடிவத்திற்க்குள் கொண்டு வரவும் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்க்காகவும் சில காட்சிகள் வெட்டப்படும் சில காட்சிகள் மாற்றப்படும் சில காட்சிகள் சேர்க்கப்படும். இதை தவிர்த்து மிக முக்கியமான விஷயம் அமெரிக்க ஆதரவு கருத்துக்களையும் நாட்டு பற்று சமாச்சாரங்களையும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் தூவுவார்கள். மனிதர்களை வில்லனாக காட்டிய படங்களை கூட பார்த்துவிடலாம் ஆனால் அமெரிக்காவை வில்லனாக காட்டிய படங்கள் தேடினாலும் கிடைக்காது. 1979-ல் ஈரானில் அமெரிக்க தூதரகம் சிறைப்பிடிக்கப்பட அதில் இருந்து தப்பிக்கும் ஆறு அமெரிக்கர்களை கனடாவின் உதவியுடன் அமெரிக்க உளவுதுறையான சி.ஐ.ஏ காப்பாற்றிய சம்பவத்தை மேலே சொன்ன விஷயங்களெல்லாம் கலந்து வெளிவந்திருக்கும் படம் தான்  'Argo'.

           படத்தின் கதைகளத்திற்க்கு தேவையான வரலாற்று பின்னணியை வாய்ஸ் ஓவரில் சொல்லியப்படி படம் தொடங்குகிறது. ஈரானின் கடைசி மன்னரான  Mohammad Rezā Shāh Pahlavī ஈரானிய புரட்சியின் மூலம் பதவியில் இருந்து அகற்றப்படுகிறார். உயிரை காப்பாற்றி கொள்ளும் பொருட்டு அவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைகிறார். அதுவரை வெளிநாட்டில் இருந்து புரட்சியை வழிநடத்திய Ayatollah Khomeini ஈரான் திரும்பி நாட்டின் முதன்மை தலைவராக பதவி ஏற்று கொள்கிறார். ஈரானிய மக்கள் தப்பி ஓடிய மன்னரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு எதிராய் போராடுகின்றனர். டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போரார்ட்டகாரர்கள் அங்கு இருக்கும் 50-க்கும் மேற்ப்பட்ட அமெரிக்கர்களை சிறைப்பிடிக்கின்றனர். இந்த சம்பவத்தின் போது அமெரிக்க தூதரக ஊழியர்கள் ஆறு பேர் தப்பித்து கனட நாட்டு தூதரின் வீட்டில் தஞ்சமைடைகின்றனர்.

         கனட தேச தூதரின் வீட்டில் இருக்கும் அந்த ஆறு அமெரிக்கர்களையும் எப்படி கூட்டி வருவது என சி.ஐ.ஏ அதிகாரி டோனி மெண்டெஸ் மற்றும் அவருடை மேலதிகாரி Jack O'Donnell யோசித்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கனட நாட்டு திரைப்படம் எடுப்பதாக சொல்லி லொக்கேஷன் பார்ப்பதற்க்காக ஈரான் போய் அவர்களையும் தங்களுடன் வந்ததாக சொல்லி அழைத்து வந்துவிடலாம் என்று யோசனை சொல்கிறார் டோனி. டோனியின் திட்டத்தை செயல்படுத்த தயாரிப்பாளர் ஒருவரை பிடித்து போலி திரைப்பட தயாரிப்பு நிறுவனம், அவர்களுக்கு போலி பாஸ்போர்ட்,  போஸ்டர் டிசைன், பிரஸ்மீட் என ஒரு திரைப்படத்துக்கான எல்லா வேலையையும் செய்கின்றனர். அந்த போலி படத்துக்கு வைக்கப்படும் பெயர் தான் 'Argo'.

            ஆர்கோவில் துணை தயாரிப்பாளர் என்று போய் சொல்லி டெஹரான் வருகிறார். அங்கு அந்த ஆறு அமெரிக்கர்களையும் சந்தித்து அவர்களுடைய நம்பிக்கையை பெற்று தன்னுடன் வருவதற்க்கு சம்மதிக்க வைக்கிறார். அதன் பின்னால் வரும் தடைகளை எல்லாம் தாண்டி எப்படி அவர்களை ஈரானை விட்டு வெளியே கொண்டு வருகிறார் என்பதையெல்லாம் படத்தில் பாத்துக்கோங்க.
Argo Fuck Yourself :) :)

         அனல் பறக்கும் சண்டைகளோ, அட்டகாசமான ஸ்பெஷல் எஃபெக்ட்டோ இல்லாமலே மொத்த படமும் பரபரவென இருக்கிறது. காமெடி, பரபரப்பு எல்லாம் சமவிகிதத்தில கலந்த படு நேர்த்தியான திரைக்கதை மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறது. டோனி மெண்டெஸ் ஆக நடித்ததுடன் படத்தை இயக்கவும் செய்து இருக்கிறார் Ben Affleck. Breaking Bad டி.வி சீரிஸ் புகழ் Bryan Cranston டோனியில் மேலதிகாரி Jack O'Donnell ஆக நடித்து இருக்கிறார். Ben Affleck தான் முதலில் ஒரு நடிகர் அப்புறம் தான் இயக்குநர் என்றாலும் செம மொக்கையான நடிகர் ஆனால் அவர் இயக்கிய படங்கள் எல்லாம் அதற்கு நேர்மாறானவை. அவர் முதன்முதலாக திரைக்கதை எழுதிய Good Will Hunting எனக்கு ரொம்ப பிடித்த படங்களுள் ஒன்று அதற்காக சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வாங்கியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். பென் தான் இயக்கிய முதல் படமான Gone Baby Gone படத்திலையே விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்கினார் அதை தொடர்ந்து வந்த The Town படத்திலும் நல்ல விமர்சனங்கள் பெற்று நம்பிக்கை தரும் இயக்குநராக கருதப்பட தொடங்கினார். Argo இவருடைய இயக்கத்தில் வெளிவரும் மூன்றாவது  திரைப்படம். படம் வெளிவந்த உடனே பரவலான கவனத்தை பெற்றதுடன் பென் அஃப்ளெக்கின் சிறந்த படமாகவும் இந்த வருடத்தின் சிறந்த படமாகவும் வெகுவாக சிலாகிக்கப்பட்டது. 

    முதல் பத்தியில் சொன்னது போல் இந்த படத்திலும் அமெரிக்க ஆதரவு விஷயங்கள் நிறையவே சேர்க்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் இந்த ஆப்ரேஷனில் கனடாவுடையே பங்கு ரொம்பவே அதிகம் அமெரிக்கா சும்மா ஆள் அனுப்பி கூட்டி வரும்  வேலையை மட்டுமே செய்தது. ஆனால் படத்தில் சி.ஐ.ஏ தான் எல்லா வேலையையும் செய்து விட்டு கனடாவுக்கு விட்டு கொடுத்தது போல் காட்டி இருப்பார்கள். Pearl Harbour மாதிரி நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயத்தை மாற்றி எடுத்திருந்தால் கடுப்பாய் இருந்திருக்கும் ஆனால் இந்த கனடா மேட்டரெல்லாம் படம் பார்த்துவிட்டு விக்கிபீடியா மேயும் போது கிடைக்கும் தகவல்கள் என்பதால் படம் பார்க்கும் போது எந்த பிரச்சனையும் இருக்காது.

     சிறந்த திரைப்படம் உட்பட ஏழு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படிருந்தாலும் Ben Affleck-க்கு சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை கிடைக்காதது இந்த வருட ஆஸ்கரின் மிகப்பெரிய ஏமாற்றமாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருதுகளுக்கான நுழைவு வாயிலாய் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த திரைப்படம் , சிறந்த இயக்குநர் உட்பட பல விருதுகளை பெற்ற போதே இது தான் இந்த வருடம் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் விருதை பெறப்போவதாக ஆருடம் சொன்னார்கள் ஆனால் கடைசியில் பிம்பிளாக்கி பிளாபி :) :).  பிரபல இயக்குநர் Queintin சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தனக்கு சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை கிடைக்காததை விட  Ben Affleck-க்கு  கிடைக்காததே வருத்தமளிப்பதாகவும் பரிந்துரை மட்டுமல்ல சிறந்த இயக்குநருக்கான விருதை அவர் தான் வாங்க போவதாகவும் நினைத்திருந்ததாக ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.

Ben Affleck @ Golden Globes

    ஆஸ்கர் விருதுகளில் ஒரு வழக்கம் உண்டு அதாவது எந்த திரைப்படம் சிறந்த இயக்குநருக்கான விருதை வாங்குகிறதோ அதுவே சிறந்த படத்திற்க்கான விருதையும் வாங்கும். கடந்த பத்து வருடங்களில்  ஒரு முறை தான் அது தவறி இருக்கிறது , 2005-ம் ஆண்டு சிறந்த படத்திற்க்கன விருதை  Crash வாங்க சிறந்த இயக்குநர் விருதை Brokeback Mountain படத்திற்க்காக Ang Lee வாங்கினார் அந்த வருடம் கூட Crash படத்தின் இயக்குநர் Paul Haggis சிறந்த இயக்குநர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.   சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை கிடைக்காவிட்டாலும் சிறந்த படத்திற்க்கான விருதை வாங்கும் என இணையத்தில் படத்தின் ஆதரவாளர்களும் சில விமர்சகர்களும் எழுதி தள்ளுகின்றனர் என்ன நடக்க போகிறது என்று பிப்ரவரி 24-ம் அன்று தெரிந்து விடும் பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.

  ஆர்கோவிற்க்கு ஆஸ்கர் கிடைக்கிறதோ இல்லையோ ரசிகனை முட்டாளாக்காத பரபரப்பான படங்கள் பிடிக்குமென்றால் Just Go for it :) :).


       
[ Read More ]

Gulaal [ ஹிந்தி ~ 2009 ] - இந்தியாவின் கறுப்பு பக்கங்கள்

        "Divide and Rule" - பிரித்தாளும் தந்திரம். இந்தியா மொத்தத்தையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்க்காக ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பிரபலமான ராஜதந்திரமாக சரித்திர பக்கங்கள் சொல்கின்றன. சுதந்திரத்திற்க்கு பிறகு "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற சொல்லாடல் ரூபாய்களிலும் பாடபுத்தகத்திலும் எத்தனை அழுத்தமாய் சொல்ல முனைந்தாலும் ஏனோ மக்கள் மனதில் ஏறவிடாமலே கவனமாக கையாளப்படுகிறது.  சாதி, மதம், இனம், மொழி, பணம், தொழில் என  எண்ணற்ற காரணிகளை கொண்டு கோடிக்கணக்கான மக்களை மிகச்சிறு குழுக்களாக பிரிந்து கிடக்கின்றனர் அல்லது பிரிக்கப்படுகின்றனர். தலைமுறை தலைமுறையாக வளத்தெடுக்கப்பட்ட இனப்பற்றையும் அடுத்த இனத்தின் மீதான வன்மைத்தையையும் கொஞ்சமாய் தூண்டிவிடுவதன் மூலமாக மட்டுமே எத்தனை கொடூரங்கள் நடத்தி காண்பிக்கப்பட்டிருக்கிறது.  வரலாறு முழுவதும் மனிதனுக்கு துணையாய் வந்திருப்பது ரத்த வாடையும் ரத்த வெறியும் தானோ. யாரோ ஒருவனின் அபிலாஷைக்காக யாரோ ஒருவனின் பேராசைக்காக  யாரோ ஒருவரனின் போதாமைக்காக யாரோ பேசிய உண்மைக்காக யாரோ பேச மறுத்த பொய்க்காக யாரோ ஒருவன் கொலை செய்யப்படுகிறான் யாரோ ஒருவன் குருடாக்க படுகிறான் யாரோ ஒருத்தி கற்பழிக்கப்படுகிறாள் யாரோ ஒருவன் கண்ணீர் சிந்துகிறான் யாரோ ஒருவன் புன்னகை பூக்கிறான். சுதந்திரத்துக்கு பிறகு வெள்ளையர்கள் போய்விட்டாலும் எப்படி காபியும் கால்சட்டையும் இங்கேயே தங்கியதோ அப்படியே தான் இந்த அரசியல் தந்திரமும் அப்படியே இருக்கிறது. ஆங்கிலேயர்களின் இடத்தை So-Called தலைவர்கள் எல்லாம் எடுத்து கொண்டு எவ்வளவு தூண்ட முடியுமோ தூண்டி எவ்வளவு பிரிக்க முடியுமோ பிரித்து வைத்திருக்கின்றனர். இப்படி உணர்ச்சியை தூண்டும் So-Called தலைவர்கள் சாதிய உணர்வு தூண்ட பெற்ற இளைஞர்களை எப்படியெல்லாம் பயன்படுத்தி கொள்கின்றனர் என்பதை செவிட்டில் அறைந்த மாதிரி சொல்லும் படம் தான் அனுரக் கஷ்யாப்பின்  இயக்கத்தில் வெளிவந்த ‘Gulaal’.


    வெகுசில விதிவிலக்குகள் தவிர்த்து பெரும்பாலான தமிழ்படங்களில் சாதி பெயர் கூட உபயோகப்படுத்தபடுவதில்லை. தமிழ்நாட்டை பற்றி எதுவும் தெரியாத ஒருவர் தமிழ் திரைப்படங்களை மட்டும் பார்க்கும் பட்சத்தில் தமிழ் மக்கள் யாவரும் தங்கள் சாதிய அடையாளங்களை மறத்து சமத்துவமாக இருப்பதாக எண்ணிவிடும் வாய்ப்புகளே அதிகம். இந்த விஷயத்தில் நம் இயக்குநர்களை குறை சொல்வதற்க்கு ஏதுமில்லை அவர்களுக்கு இருக்கும் Creative Space அவ்வளவு தான். இந்தியில் மட்டும் இதெல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் அனுரக் கஷ்யாப்க்கு சொல்ல வந்ததை நேராகவே சொல்லும் தைரியம் இருக்கிறது. ராஜஸ்தானில் இருக்கும் முக்கிய சாதிகளுள் ஒன்றான ராஜபுத்திர இனத்தலைவர்கள் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் ஆயுதமாய் கொண்டு தங்கள் சுயலாபங்களுக்காக அரசியல் காய் நகர்த்தல்களுக்காக படித்த இளைஞர்களை கொலைகாரர்களாகவும் சூழ்ச்சி செய்பவர்களாகவும் கொலை செய்யப்படுபவர்களாகவும் சூழ்ச்சியில் சிக்குபவர்களாகவும்எப்படி மாற்றுகின்றனர் என்பதை எந்த சமரசமும் இன்றி படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

      ராஜ புத்திரர்களின் வீரத்தையும் இந்தியாவிற்க்காக அவர்கள் செய்த தியாகங்களையும் பற்றிய வசனங்களோடு தொடங்குகிறது படம். இத்தனை தியாகங்கள் செய்த ராஜபுத்திரர்களுக்கு "மன்னர் மானிய ஒழிப்பு முறை" சட்டத்தின் மூலம் இந்தியா துரோகம் செய்து விட்டதாகவும் அதற்க்காக தனி நாடு வேண்டி போராட்டத்திற்க்கு தயாராகுமாறு துகி பனா அழைப்பு விடுக்கிறார். <ஃப்ளாஷ்பேக்> இந்த கூட்டம் நடப்பதற்க்கு 11 மாதங்களுக்கு முன்னால் திலிப் சிங் அந்த ஊருக்கு வருகிறார். ஹாஸ்டல் கிடைக்காததால் தந்தையிடம் இருந்து பிரிந்து வாழும் ராஜ புத்திர இளவரசனான ரன்ஸாவுடன் தங்குகிறார். ஒரு முறை கல்லூரியில் மற்ற மாணவர்களால் அடித்து நிர்வாணமாக்கப்பட்டு பாத்ரூமில் வைத்து பூட்டுகின்றனர். அங்கே அந்த கல்லூரி பேராசிரியர் அனுஜாவும் நிர்வாணமாய் பூட்டப்பட்டிருப்பது தெரிகிறது. இந்த சம்பவத்தை அப்படியே விட்டு விடும் படி திலீப்பின் அண்ணன் சொன்னாலும் தட்டி கேட்க வேண்டும் என ரன்ஸா திலீபை மறுபடி கல்லூரிக்கு அழைத்து செல்ல மறுபடியும் தாக்கப்படுகின்றனர். இதற்கு பின்னால் லோக்கல் ராஜ புத்திர தலைவரான துகி பனாவின் உதவியோடு பிரச்சனை தீர்க்கப்படுகிறது.

        கல்லூரி தேர்தலில் ரன்ஸா நிற்கிறான் அவனுக்கு போட்டியாக அவனுடைய தந்தையின் அங்கிகரிக்கப்படாத மகளான கிரண் நிற்க்கிறார். தேர்தலில் வரும் பிரச்சனையில் கிரணின் அண்ணனால் ரன்ஸா கொலை செய்யப்படுகிறார். ரன்ஸாவின் இடத்தில் அவருடைய நண்பரான திலீப் தேர்தலில் போட்டியிட்டு பனாவின் ஆதரவோடு ஓட்டு எண்ணிக்கையில் மோசடி செய்து வெற்றி பெறுகிறார். தேர்தலில் தோல்வி அடைந்த கிரண் அண்ணனின் அறிவுரையின் பேரில் திலிப்புடன் நெருங்கி பழகுகிறார். இதற்க்கிடையில் கல்லூரி விரிவுரையாளர் அனுஜா திலிப்புடன் வந்து தங்கி கொள்கிறார். கிரணின் தூண்டுதலினால் பனாவை எதிர்க்க ஆரம்பிக்கிறார் திலிப் கல்லூரி விழாவுக்காக திரட்டிய பணத்தை ராஜபுத்திரர்களின் போரார்ட்டத்திற்க்கு தர மறுக்கிறார்.


       திலீப்புடன் இருந்த பழக்கத்தின் காரணமாக கிரண் கர்ப்பமாகிறார். கர்பத்தை கலைப்பதுடன் திலீப்பை பார்ப்பதையே சுத்தமாக தவிர்க்கிறார் கிரண். மனமுடைந்த திலீப் கல்லூரி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய கிரண் அந்த பொறுப்பை ஏற்கிறார். கடைசியாக கிரணை திலீப் சந்திக்கும் போது அந்த பதவிக்காக தான் பழகியதாக சொல்லி திலீப்பை அனுப்பிவிடுகிறார். மறுபடி அண்ணனின் அறிவுரைப்படி பனாவுடன் கிரண் நெருக்கமாக திலீப் என்ன செய்தார்..,  அரசியல் ஆட்டத்தில் யார் தலையெல்லம் சாய்க்கப்பட்டது.., தனி நாடு போராட்டம் என்ன ஆனது.., என்பதையெல்லாம் கணிணி திரையில் காண்க..,

        படத்தின் மிகப்பெரிய பலம் துகி பனவாக நடித்திருக்கும் கே.கே.மேனனின் நடிப்பு. உடல் மொழியிலும் வசன உச்சரிப்புகளிலும் மிக சரியா அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறார். கதைக்கு பெரிதாய் தொடர்பு இல்லாவிட்டாலும் படம் நெடுகிலும் துகி பனாவின் அண்ணனாக வந்து அவரின் செயல்களை கிண்டல் அடித்து பாட்டு பாடும் ப்யூஸ் மிஸ்ராவின் கதாப்பாத்திரம் முக்கியமானது. ப்யூஸ் மிஸ்ராவுடன் அர்த்தநாரீஸ்வரர் போல் உடலில் வண்ணமிட்டபடி ஒருவர் வருகிறார், ஜான் லென்னன், பாப் மார்லி படங்களெல்லாம் ப்யூஸ் மிஸ்ரா, ரன்ஸா ஆகிய வித்தியாசமானவர்களின் வீட்டில் இருப்பதெல்லாம் எதோ குறியீடு போல இருக்கிறது யாராவது குறியீடு சித்தர்கள் விளக்கினால் நலம்.
 
        படத்தின் இயக்குநர் அனுரக் கஷ்யாப் தமிழ் இணைய உலகில் பரவலாக அறிமுகமானவர். இந்திய இண்டிபென்டன்ட் சினிமாவின் முகமாகவே மாறி வருபவர் (ஃபேஸ்புக்கை முகநூல் என்று சொல்வது போல் இண்டிபென்டன்ட் சினிமாவை சுதந்திர திரைப்படம் என்று சொல்லலாமா ? ?). 2001 திரைக்கதை எழுத தொடங்கி பட்ஜெட் முதற்கொண்டு பல்வேறு பிரச்சனைகளால் 2009-ல் தான் வெளிவந்தது. விமர்சகர்களால் புகழப்பட்டாலும் வழக்கம் போல் பாக்ஸ் ஆஃபிஸில் ஊத்தி கொண்டது. படம் என்னவோ ராஜஸ்தானையும் ராஜ புத்திரர்களையும் பற்றி இருந்தாலும் இதில் காட்டப்படும் சம்பவங்கள் எல்லா மாநிலங்களிலும் எல்லா சாதிகளிலும் ஏதோ ஒரு ரூபத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

        
        மாணவர்களை மையமாக கொண்ட அரசியல் படங்கள் என்றாலே அவர்கள் ஆட்சியை ஃபேன்டஸி கனவுகளை படங்களையே பார்த்த நமக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தருகிறது. அதே போல் அரசியல் பிரச்சனைகளை இந்த அளவு சிறப்பாக கையாண்ட வேறொரு இந்திய படத்தை நான் பார்த்ததில்லை. நண்பர்கள் அனைவரும் தவற விடாமல் பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.
[ Read More ]

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த 8 படங்கள் - 2


                  சென்னை திரைப்பட விழாவில் நான் பார்த்த படங்களுள் சிறந்த எட்டு படங்களை பட்டியலிட போன பதிவில் தொடங்கி இந்த பதிவில் முடிக்கிறேன். சென்ற பதிவில் நான்கு படங்களை அறிமுகப்படுத்தி விட்டதால் மிச்சமிருக்கும் நான்கு படங்களை சிறந்த நான்கு படங்களாகவும் கொள்ளலாம்.

சென்ற பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்..,

4. Departures:

             மரணத்தை சூழ்ந்திருக்கும் மர்மமே அதன் மீதான பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது. அந்த பயமே மரணத்தை சார்ந்து இருப்பவர்கள் மீதான அசூசையும் வெறுப்பையும் இயல்பாகவே உருவாக்கி விடுகிறது. அப்படி மரணத்தை சார்ந்த ஒரு வேலையை தேர்ந்தெடுக்கும் ஒரு இசை கலைஞன் மீதான வெறுப்பும் அசூசையும் அன்பாக மாறும் அற்புதம் தான் "Departures". செல்லோ (பெரிய வயலின்) கலைஞனான நாயகனின் இசை குழு கலைக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக இறந்தவர்களுக்கு மேக்கப் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேண்டா வெறுப்புடன் வேலைக்கு சேர்கிறான். இறந்த வீடுகளில் கிடைக்கும் அனுபவங்களின் மூலம் அந்த வேலையை வெறுத்த அவனும் மற்றவர்களும் அந்த வேலை மூலம் கிடைக்கும் ஆத்ம திருப்தியை உணர்வது தான் கதை.


       மொத்த படமுமே மரணத்தை சுற்றியே நடக்கிறது ஆனாலும் நம் கண்ணுக்கு க்ளிசெரின் ஊற்ற முயற்சிக்காமல் ஒரு உன்னதமான அனுபவத்தை கொடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். தெளிவான தேவையற்ற காட்சிகளற்ற திரைக்கதை, அற்புதமான இசை, பலமான உரையாடல்கள் எனக் குறிப்பிட்டு சொல்லும் அளவு குறைகள் ஏதும் இல்லாத அற்புதமான படம். இந்த படம் 2008-ம் ஆண்டிற்க்கான சிறந்த வெளிநாட்டு படத்திற்க்கான ஆஸ்கர் விருதை பெற்றது.

3. Final Cut - Ladies and Gentlemen :

              முதலில் இது ஒரு திரைப்படம் அல்ல, 450-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களின் காட்சி துணுக்குகளின் தொகுப்பு. என்ன தான் எண்ணற்ற திரைப்படங்களின் கதம்ப மாலை என்றாலும் அவற்றின் துணையோடு ஒரு சின்ன கதையையும் சொல்லி இது வரை இருந்த கதை சொல்லும் பாணியை எல்லாம் அனாயசயமாக தாண்டி இருக்கிறார்கள். பஸ்டர் கீடன் தொடங்கி ராம் சரண் தேஜா வரை, Birth of the Nation தொடங்கி ஓம் ஷாந்தி ஓம் வரை, 2001 தொடங்கி அவதார், Pulp Fiction தொடங்கி Paprika வரை உலகின் அத்தனை கிளாசிக்கிலும் அத்தனை முக்கியமான படங்களையும் தொட்டு செல்கிறது.


              நமக்கு ரொம்ப பிடித்த படத்தின் ஒரு காட்சி எதோ ஒரு படத்தில் வந்தாலே உற்சாகமாய் இருக்குமல்லவா இந்த படத்தில் உங்களுக்கு பிடித்த அனைத்து படங்களில் இருந்தும் ஒரு துணுக்கு வந்து விடுவதால் மனதிற்க்குள் ஒரு மாதிரி இதமான உணர்வு ஏற்படுகிறது. படம் மட்டுமல்ல படம் முடிந்த பின்னர் அனைத்து படங்களின் பெயரையும் காட்சிகளின் வரிசையிலையே போடுகின்றனர் பெரும்பாலனவர்கள் அனைத்தையும் நின்று பார்த்துவிட்டு சென்றனர். திரைப்பட காதலர்கள் அனைவரும் நிச்சயம் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படம்.

2. Holy Motors:

                பார்ப்பவர்களின் கண்களுக்கும் மூளைக்கும் இடையில் கண்ணாமூச்சு விளையாடும் வித்தியாசமான சர்ரியலிஸ திரைப்படம். ஒரு நடிகனுக்கு ஒரு நாளில் ஒன்பது இடங்களில் நடிப்பதற்க்கான பட்டியல் ஒன்று தரப்படுகிறது. நடிப்பென்றால் நாடகத்திலோ திரைப்படத்திலோ அல்ல நிஜ வாழ்க்கையில் அதாவது கூடு விட்டு கூடு பாய்வது போல் ஒரு வாழ்க்கையில் இருந்து இன்னொரு வாழ்க்கைக்கு செல்ல வேண்டும். எது நிஜ வாழ்க்கை ?? எது நடிப்பு என்றெல்லாம் பிரிக்க முடியாத படி அங்காங்கே சில வட்டங்களின் முனைகளை இணைத்து சென்று இருக்கிறார்கள்.


                அரசியல்வாதி, பிச்சைகாரன், சினிமாவில் மோஷன் கேப்சர் ஆர்டிஸ்ட், பைத்தியம், கொலை செய்பவன், கொலை செய்யப்படுபவன், இசை கலைஞர், சாக காத்திருக்கும் கிழவர், குடும்ப தலைவர் என ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களை எந்த பிழையும் செய்து இருக்கிறார் நாயகன் Denis Lavant. எந்த தர்க்கத்துக்குள்ளும் அடங்காத கதையாக இருந்தாலும் படம் ஓடும் 100 நிமிடங்களும் தலையை திருப்பாமல் பார்க்க வைக்கின்றனர். படத்தில் ரொம்ப பிடிச்ச இன்னொரு விஷயம் இசை அதிலும் குறிப்பாக அந்த தீம் மியூசிக். நல்ல சவுண்ட் சிஸ்டம்ல கேட்டு பாருங்க இரத்ததில் ஏதோ ஒரு திரவம் கலந்து இருக்கையில் இருந்து சில மில்லி மீட்டர்கள் மேலே செல்வதை உணர்வீர்கள்.


1. Amour:

              இந்த வருட திரைப்பட விழாவில் நான் பார்த்த முதல் திரைப்படம் சந்தேகமே இல்லாமல் நான் பார்த்த சிறந்த படமும் இதுவே. வாழ்க்கையில் சுகமான முடிவு என்று ஒன்று கிடையவே கிடையாது நமது எல்லா பயணங்களும் ஒரு தோல்வியை நோக்கி ஒரு சூன்யத்தை நோக்கி அல்லது ஒரு மரணத்தை நோக்கியே இருக்கிறது.  வயதான தம்பதிகளான ஜார்ஜ் மற்று ஆன்னி பெரிய வீட்டில் தனியா வசிக்கின்றனர். வயதானாலும் அன்யோன்யமும் காதலும் குறையாமல் இருக்கிறது அதிலும் ஜார்ஜ் எப்போதும் ஆன்னியை விட்டு எப்போதும் விட்டு விலகாமலே இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆன்னி தீவிரமாக உடல்நிலை மோசமாகி கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இடையில் ஏற்படும் பிரிவின் துயரமும் காதலின் கடைசி அத்தியாயமும் தான் படத்தின் களம்.


               படத்தின் தொடக்க காட்சியிலேயே படத்தின் முடிவை யூகித்து விடலாம் ஆனால் படத்தின் பலம் முடிவு ஏற்படுத்தும் அதிர்ச்சி அல்ல அதை நோக்கிய பயணம் ஏற்படுத்து வலியே. படத்தை இயக்கி இருப்பது உலகின் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவரான Micheal Hanake கதாப்பாத்திரங்கள் உணரும் வலியை பார்வையாளர்களுக்கு கணமான காட்சிகளின் மூலம் கட்த்தி இருக்கிறார். படம் பார்த்த பின் ஏற்படும் பாதிப்பு நீங்க நிச்சயம் கொஞ்ச காலமாவது பிடிக்கும். இந்த படம் குறித்து கொஞ்சம் விரிவாக தனி பதிவா எழுதிட விருப்பம். விருப்பத்தை சோம்பேரித்தனம் வென்று விடாமல் இருப்பின் கண்டிப்பாக எழுதுவேன்..


           இந்த படங்கள் தவிர உங்கள் அனைவருக்கும் நன்கு பரிட்சியமான இரண்டு மிக மிக முக்கியமான படங்களை பார்த்தேன் ஒன்று சத்யஜித் ரேவின் "பதேர் பாஞ்சலி"   மற்றொன்று தியாகராஜன் குமாரராஜாவின் "ஆரண்ய காண்டம்". இரண்டு படங்களை பற்றியும் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை இருந்தாலும் ஆரண்ய காண்டம் திரையிடப்பட்ட சூழல் குறித்து சொல்ல விரும்புகிறேன்.

           முதலில் புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ராணி சீதை ஹாலில் திரையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 300 - 400 இருக்கைகள் கொண்ட ராணி சீதை ஹால் வாசலில் கிட்ட தட்ட 1000 பேர் நின்றனர் எப்படியோ அடித்து பிடித்து உட்கார்ந்தால் படச்சுருள் வராததால் திரையிடல் இல்லை என அறிவித்தனர். பின்னர் 8 மணிக்கு சின்ன அரங்கான Woodlands Symphony-ல் திரையிடப்படுவதாய் அறிவிக்கப்பட்டு பின்னர் கூட்டம் காரணமாக 1400 இருக்கைகள் கொண்ட Woodlands அரங்கில் திரையிடப்பட்டது. அரங்கு நிறைய கூட்டத்தோடு ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒவ்வொரு தீம் இசைக்கும் கைதட்டலால் விருது கொடுத்து கொண்டிருந்தனர்.  தமிழ் சினிமா பற்றி தெரியாத யாரிடமாவது இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்த படம் என்று சூடம் அணைத்து சொன்னால் கூட நம்பி இருக்க மாட்டார்கள். சில அலைச்சல்கள் சில ஏமாற்றங்கள் இருந்தாலும் மொத்தமாக ஒரு நல்ல அனுபவத்துடன் திரைப்பட விழா இனிதாய் நிறைவடைந்தது.

     
[ Read More ]

சென்னை சர்வதேச திரைப்பட விழா - ஒரு முன்னோட்டம்

                    வருகின்ற 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை எட்டு நாட்கள் சென்னையில் 10-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். 57 நாடுகளை சேர்ந்த 175 படங்கள் திரையிடப்பட இருக்கிறது என்றாலும் எவ்வளவு முயன்றாலும் இதில் பாதி படத்தை கூட பார்க்கமுடியாது அதிகபட்சம் ஒரு நாளைக்கு 5 படம் வீதமாக 40 படங்கள் பார்க்கலாம் அதுவும் எட்டு நாட்களும் விடுப்பு எடுத்தால் மட்டுமே சாத்தியம்.

Ciff 2012 Poster

                சென்ற வருடம் தான் முதல்முறையாக பெரும் எதிர்ப்பார்ப்புடன் முதல்முறையாக திரைப்பட விழாவுக்கு சென்றேன் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியானதா என்றால் இல்லை என்பதே பதிலாகும். நான் பார்த்த படங்களுள் பாதி படங்கள் வெகு சுமாரான அல்லது மொக்கை படங்கள். வூட்லண்ட்ஸ் தியேட்டரில் தான் பெரும்பாலான படங்களை பார்த்தேன் அங்கே பகலில் படம் பார்க்கும் போது நிறைய இடைஞ்சல்கள் இருந்தது. சராசரியாக 5 நிமிடத்திற்க்கு ஒரு முறை கதவு திறக்கப்பட்டு கொண்டே இருந்தது யாராவது வந்து கொண்டோ போய் கொண்டோ இருந்தார்கள் மாலை மற்றும் இரவு காட்சிகளில் இந்த பிரச்சனைகள் அவ்வளவாக இல்லை. சத்யம்,ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும் அங்கு சீட் கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கும். இவ்வளவு இருந்தாலும் ரொம்ப பிடித்த திரைப்படமொன்றை பெரிய திரையில் காணும் போது கிடைக்கிற அனுபவத்திற்க்காவே கலந்து கொள்ள வேண்டும். சென்ற வருடம் A Separation திரைப்படத்தை விழாவில் பார்த்த போது ஏற்பட்ட உணர்வுகள் இன்னமும் நினைவிருக்கிறது அப்படி ஒரு அனுபவத்தை எதிர்ப்பார்த்தே இவ்வருடமும் செல்கிறேன். சென்ற வருடத்தை விட இந்த வருட திரைப்பட பட்டியலில் பெயர் தெரிந்த பார்க்க விரும்பிய படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது அந்த படங்களுள் முக்கியமான படங்கள் சிலவற்றை பற்றிய சின்ன அறிமுகம்..,

Amour :

          தற்கால இயக்குநர்களுள் மிக முக்கியமானவரான Micheal Hanke-ன் சமீபத்திய திரைப்படம். உலகின் மிக பிரபலமான திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கு சிறந்த திரைப்படத்திற்க்கான தங்கப்பனை விருதையும் பெற்று இருக்கிறது. இதுவே இந்த படத்தை பெரும்பாலன ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படமாக மாற்றி இருக்கிறது.  Micheal Hanke-ன் முந்தைய படமான The White Ribbon படமும் தங்கப்பனை விருது பெற்றது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

Pieta :

           தமிழ் இணைய உலகில் மிக பிரபலான இயக்குநரான கிந்கி-டுக்கின் சமீபத்திய திரைப்படம். உலகம் முழுதும் நிறைய ரசிகர்கள் இருந்தாலும் பெரிய அளவில் அங்கிகாரம் எதுவும் கிடைக்காததால் பெரும்பாலும் சர்ச்சைகுரிய இயக்குநராய் மட்டுமே அடையாளப் படுத்தபட்டார். இப்போது முக்கியமான திரைப்பட விழாவான வெனிஸில் சிறந்த படத்துக்கான விருதை பெற்றதின் மூலம் மிக பெரிய அங்கிகாரத்தை பெற்றுள்ளார். இந்த விழாவில் நிறைய ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பதர்க்கான காரணம் இந்த விருதல்ல அவரின் பெயர் மட்டுமே.

CIFF 2012 Films


Not One Less :
               
           சீனாவின் அழகியலையும் கலாச்சார பின்னணியையும் கலந்து அற்புதமான படங்களை எடுக்கும் Zhang Yimou  1999-ல் எடுத்த படம். சீன அரசு 90-களில் கல்வியை கட்டாயமாகி மிக தீவிரமாக அமல் படுத்தியது ஆனாலும் கிராமப்புற பள்ளிகள் ஒற்றை ஆசிரியரை வைத்து கொண்டு மாண்வர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது பெரும் சவாலாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு மாதக்காலம் பயிற்சி ஆசியராய் வரும் 13 வயது பெண்ணின் கதை தான் படம். பார்ப்பவர்களின் ஆன்மாவை தொடும் அற்புதமான படம். இந்த படத்தை பார்க்காத நண்பர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

Holy Motors :

           ஒரு பத்து நாளைக்கு முன்பு வரை இப்படி ஒரு படம் வந்து இருப்பதே தெரியாது. பிரபலமான ஃப்ரஞ்ச் சினிமா பத்திரிக்கையான Cahiers Du Cinema இந்த படத்தை இந்த வருடத்தின் சிறந்த படமாக தேர்ந்தெடுத்ததும் ஒரு மாதிரி ஆர்வம் தொற்றிக்கொண்டது. த்ருபோ, கோதார் போன்ற ஃப்ரஞ்ச் புதிய அலையின் ஆளுமைகள் எல்லாம் இந்த பத்திரிக்கையில் தான் ஆரம்ப காலத்தில் விமர்சனம் எழுதி கொண்டிருந்தார்கள். படத்தின் டிரைலரை  படித்ததும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு பண்ணிட்டேன். திரைப்பட விழாவில் தவறாமல் பாக்கனும் மிஸ் பண்ணுனா டவுன்லோடு தான் :).

Pather Panchali :

             இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் விதமாக இந்த விழாவிலும் சில முக்கியமான இந்திய படங்கள் திரையிடப்பட இருக்கிறது அதிலும் முக்கியமாக இந்தியாவின் ஆக சிறந்த படங்களுள் ஒன்றாக கருதப்படும் பதேர் பாஞ்சலி திரையிட இருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். ஏற்கனவே பார்த்து இருந்தாலும் திரையரங்கில் பார்க்க விருப்பமாக இருக்கிறது அதுவும் விடுமுறையன்று திரையிட இருப்பதால் கண்டிப்பாக பார்த்து விடுவேன் என்றே நினைக்கிறேன். மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையான ஜி.அரவிந்தனின் “வசுந்தரா”-வும் திரையிட இருக்கிறார்கள்.
       
Like Someone in Love:

             பிரபலமான ஈரானிய இயக்குநர்  Abbas Kiarostami இயக்கி இருக்கும் ஜப்பானிய மொழி திரைப்படம். பெரிய அளவில் நல்ல விமர்சனங்களையோ பெரிய விருதுகளையோ வாங்கவில்லை என்றாலும்  Abbas Kiarostami-ன் பெயருக்காகவே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

              இவற்றுடன்  Melancholia ( இயக்கம் : Lars von Trier), Cosmopolis ( இயக்கம் :David Cronenberg ), Zorba the Greek, Departures  ( 2009 சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருது), Antiviral, Beasts of the Southern Wild , Once Upon a Time in Anatolia  ஆகிய படங்களையும் தவறவிடாமல் பார்த்து விட விருப்பம். நண்பர்களுக்கும் தங்கள் அட்டவணையில் இந்த படங்களை சேர்த்து கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறேன்.  இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள முதல் நான்கு நாட்களுக்கான அட்டவணையில் இடம் பெறவில்லை ஆகையால் முக்கியமான படங்கள் யாவும் கடைசி நான்கு நாட்களில் தான் திரையிடுவார்கள்  என நினைக்கிறேன் அதனால் இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே விடுப்பு எடுக்க முடிந்தவர்கள்  அடுத்த வாரத்தில் விடுப்பு எடுத்தால் நிறைய நல்ல படங்கள் பார்க்கலாம் :).

பின் இணைப்புகள்:

  •  விழாவில் திரையிட இருக்கும் மொத்த படங்களின் பட்டியலுக்கு இங்கே க்ளிக்கவும்.

  • முதல் நான்கு நாட்களுக்கான பட்டியலை இங்கே க்ளிக்கி பார்க்கலாம். 

  •  பெங்களூர் உலக திரைப்பட விழாவில் திரையிட இருக்கும் படங்களின் பட்டியலை காண நேர்ந்தது. சென்னை விழாவை விட ஏகப்பட்ட நல்ல படங்கள், பிரபலமான படங்கள் என்று அசத்துகின்றனர். இங்கே க்ளிக்கி அந்த பட்டியலை பார்த்து கொஞ்சமாய் பொறாமைப்பட்டு கொள்ளுங்கள்.


[ Read More ]

Moonrise Kingdom [English ~ 2012] - அற்புதத்தின் சாளரம்


          குழந்தைகள் மற்றும் குழந்தை பருவம் குறித்தான திரைப்படங்கள் பெரும்பாலும் அவர்கள் குறித்தான  பெரியவர்களின் பகற்கனவுகளாக தான் இருக்கிறது. குழந்தைகளை அதிக பிரசங்கிகளாக, காதலுக்கு புத்தி சொல்பவர்களாக அல்லது தூது செல்பவர்களாக, தேசிய கீதத்திற்க்கு எழுந்து நிற்ப்பவர்களாக, எதிர்ப்பாலினம் மேலான ஈர்ப்போ சந்தேகமோ இல்லாதவர்களாக என நமக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ நாம் என்னவெல்லாம் எதிர்ப்பார்க்கிறோமோ அதெல்லாம் எடுத்து குழந்தைகள் படம் என்கிறோம். குழந்தைகள் இதை தான் செய்வார்கள் என சௌகரியமாக முடிவெடுத்து கொள்கிறோம் ஆனால் அவர்கள் அப்படி தான் இருக்கிறார்களா என்ன அதுமட்டுமில்லாமல் குழந்தைதனம் என்று நீங்கள் நினைக்கும் அவர்களுக்கு சீரியஸான விஷயம் என்பதயும் யாரும் நினைப்பதில்லை. குழந்தைகளுக்கென ஒரு உலகம் இருக்கிறது இத்தனை ஆண்டு ஓட்டத்தில் நாம் மறந்துவிட்ட உலகம் அவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள கூடிய அவர்களால் மட்டுமே சிருஷ்டிக்க கூடிய அற்புத உலகம். எந்த கோட்பாடுகளும் தர்க்கங்களும் இல்லாமல்  அவர்கள் சொல்லும் கதைகள் மட்டுமே அவ்வுலகங்களின் சாளரங்களை நமக்கு திறக்கின்றன. அத்தகைய கதைகளை அந்த குழந்தைகளே சொல்வது போல் படமெடுப்பது சாத்தியமென்று இதற்க்கு முன்னால் நினைத்ததேயில்லை இந்த படத்தை பார்க்கும் வரை. பிரபல இயக்குநர் Wes Anderson இயக்கத்தில் வெளியான சமீபத்திய படமான "Moonrise Kingdom" குறித்து தான் சொல்லிகொண்டிருக்கிறேன்.

           1965-ம் ஆண்டு நியூ இங்லாந்தின் ஒரு பகுதியாக சொல்லப்படும் New Penzance தீவு ஒரு சூறாவளிக்காக காத்திருக்கிறது. 12 வயதான சாம் அவன் இருக்கும் சாரணர் இயக்கத்தில் இருந்து "ராஜினாமா" கடிதம் எழுதிவைத்து விட்டு தப்பித்து  போகிறான். அதே நேரத்தில் அந்த தீவில் வாழும் வழக்கறிஞரின் மகளான சூசியும் மிகப்பெரிய புத்தக பெட்டியுடன் தப்பித்து போகிறாள். போலிஸ் விசாரணையில் சாம் ஒரு அனாதை என்ற விஷயம் மறைக்கப்பட்டு சாரணர் இயக்கத்தில் சேர்த்திருப்பது தெரிய வருகிறது. சாமும் சூசியும் சந்தித்து கொள்கின்றனர் அவர்கள் இருவருக்கும் இருக்கும் நட்பும் இருவரும் சேர்ந்தே திட்டம் போட்டு ஓடி வந்திருப்பதும் நமக்கு ஃப்ளாஷ்பேக்கில் தெரிகிறது. இருவரும் மூன்ரைஸ் கிங்டம் என்று அவர்கள் பெயர் வைத்த மலைகுகை ஒன்றில் சேர்ந்து வாழ முடிவெடுத்து காட்டுக்குள் பயணப்படுகின்றனர். போலீஸ் கேப்டன் ஷார்ப் (ப்ரூஸ் வில்லிஸ்) மற்றும் ஸ்கவுட் மாஸ்டர் (எட்வர்ட் நார்டன்) இருவரும் அளுக்கொரு புறம் தேட தொடங்குகின்றனர். அதன் பின்னால் நடக்கும் கூத்துக்களை எல்லாம் நீங்களே பார்த்து என்ஸாய் பண்ணுங்க..,

        படத்தின கதையை படிக்கும் போது பால்யத்தின்  வாயிலில் இருக்கும் மாணவர்களின் அகம் சார்ந்த பிரச்சனைகளை கூறும் படு சீரியஸான படமென்று நினைத்தால் நீங்க நவம்பர் ஃபூல் தான் :). படம் முழுவதும் குழந்தை தனம் நிரம்பி இருக்கிறது வெஸ் ஆண்டர்சன்னின் மேல் 12 வயது ஆவி பிடித்து கொண்டதோ என சந்தேகப்படும் அளவுக்கு படத்தின் எந்த முனையிலும் பெரிய மனுஷத்தனமே இல்லை. 12 வயது குழந்தைகள் கத்தியால் குத்தி கொள்வதையும் , உதட்டில் முத்தமிட்டு கொள்வதையும், திருமணம் செய்து கொள்வதையும் கூட மெல்லிய புன்னகையோடு ரசிக்க முடியுமளவுக்கு எடுத்திருக்கிறார். அந்த காட்சிகள் மட்டுமல்ல படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஒரு புன்னகை இல்லாமல் கடக்க முடியாது.

 
     படம் முழுவதும் மஞ்சள் நிறம் ஒரு கதாப்பாத்திரம் போலவே வருகிறது. அதுவும் அவர்கள் ஓடிப்போகும் காடு ஏதோ ஒரு கனவு பிரதேசம் போலவே இருக்கிறது. பிடித்த பெண்ணுடன் பிடித்த நிறங்கொண்ட பிரதேசத்தில் தொந்தரவுகளற்ற நீண்டதொரு பயணம் யாருக்கு தான் இப்படி ஒரு கனவு இல்லாமல் இருக்கும்.


      எட்வர்ட் நார்டன் , ப்ரூஸ் வில்லிஸ் போன்ற நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அத்தனை முக்கியத்துவம் இல்லை. அவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களின் உறவுகள் குறித்து அத்தனை ஆழமாக போகாமல் மேலோட்டமாகவே சொல்லி இருக்கிறார்கள் அதுவும் கூட திட்டமிட்டு செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது. நாம் குழந்தைகளாக இருந்த போது நாம் பெரியவர்களை பற்றியோ அவர்களின் உறவு சிக்கல்களை பற்றியோ அத்தனை யோசித்தோமா என்ன ??.

        தொண்ணூறுகளின் இறுதியில் அறிமுகமான Christopher Nolan, Darren Aronofsky, Wes Anderson, Guy Ritche  போன்றவர்கள்  தொடர்ச்சியான சிறந்த படங்களின் மூலம் ஹாலிவூட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தனர். மூளையை திருகும் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் வன்முறை, நெஞ்சை உலுக்கும் காட்சிகள், கெட்ட வார்த்தைகள் மிகுந்த அட்டகாசமான வசனங்கள் என அடுத்தவர்கள் சென்று கொண்டிருக்க Wes Anderson ஒரு தனித்துவமான பாதையை தேர்ந்தெடுத்தார். ஆண்டர்சென்னின் படங்கள் ஹாலிவூட் அதிகம் விரும்பாத மனிதர்களின் (sometimes மிருகங்கள்)  அகத்தை மையமாய் கொண்டே எடுக்கப்படுகிறது.மிக பெரிய வசூல் சாதனைகளையோ பெரிய விருதுகளையோ வென்றதில்லை என்றாலும் விமர்சகர்களின் செல்லக் குழந்தையாகவும் சிறிய அளவில் என்றாலும் பலமான Fan Base-ம் இருக்கிறது அதற்க்கான காரணம் அவர் எந்த காலத்திலும் சமரசம் செய்து கொள்ளாத அந்த தனித்துவம் மட்டுமே.

    
        "Wes Anderson flirts with Surrealism" அப்படின்னு ஒரு தளத்தின் விமர்சனத்தில் எழுதி இருந்தார்கள். நான் இவ்வளவு நேரம் டைப் பண்ணிட்டு இருக்கிறத ஒரே லைன்ல அசால்ட்ட சொல்லிட்டு போய்ட்டாங்க :(. படம் ஒரு முழுமையான எதார்த்த தளத்திலும் இல்லாமல் சர்ரியலிஸ தன்மையிலும் இல்லாமலும் இரண்டுக்கும் இடையிலான நூலிழையில் மொத்த படத்தையும் எடுத்து சென்று இருக்கிறார். ஆண்டர்சன் தன்னுடைய முந்தைய படங்களில் கூட இத்தகயை தன்மைகளை பயன்படுத்தி இருந்தாலும் இதில் அசால்ட்டாக அதன் உச்சத்தை தொட்டிருக்கிறார். நிச்சயமாக இந்த வருடத்தின் மிக சிறந்த படங்களுள் ஒன்றாக சொல்லலாம்.

       குழந்தைகளை விரும்புவர்களுக்கு, பயணங்களை நேசிப்பவர்களுக்கு, மஞ்சளை காதலிப்பவர்களுக்கு மற்றும் இந்த வரிசையில் வராதவர்களும் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

எக்ஸ்ட்ரா பிட்டு :
       12 வயது பையனுக்கும் நீண்ட காலமாக 12 வயதாகும் Vampire பொண்ணுக்கும் இடையேயான உறவை சித்தரிக்கும் ஸ்வீடன் நாட்டு படமான "Let the Right One In" திரைப்படத்தையும் அப்ப்டியே சேர்த்து பார்த்து விடுங்கள். ரத்தமும், காதலும், குழந்தைத்தனமும் கலந்து எடுக்கப்பட்ட அற்புதமான படம். Twilight Series போன்ற மொக்கையான Vampire படங்களை நினைத்து கொண்டு ஒதுக்கிடாதீங்க இது செமையா இருக்கும்.









[ Read More ]

Dirty Harry [English ~ 1971] - இது தாண்டா போலீஸ் !!!

     
         எழுபதுகள்ல வடக்கு கலிஃபோர்னியாவுல ஒருத்தன் வரிசையா கொலை பண்ணிட்டு இருந்தானாம். கொலை பண்ணதோட மட்டும் இல்லாம முடிஞ்சா புடிச்சு பாருங்கிற கணக்கா போலீசுக்கு விலாவாரியா லெட்டர் அனுப்பிட்டு இருந்தான். போலீசும் கண்ணுல வெளக்கெண்ணை, நல்லெண்ணை இன்னப்பிற எண்ணைகளை ஊத்தி தேடியும் அவனுக்கு "Zodiac Killer"-ன்னு பேர் மட்டும் தான் வைக்க முடிஞ்சது கடைசி வரைக்கும் பிடிக்கவே முடியல. இப்போ வரைக்கும் அவன் யாருன்னு கண்டுபிடிக்காம கேஸ் ஓபனாவே இருக்கு. இந்த கொலைகளையும் போலிஸ் விசாரணையையும் பத்தி Zodiac அப்டின்னு ஒரு அருமையான படத்தை David Fincher எடுத்து இருக்கார் நிறைய பேர் பார்த்து இருப்பிங்க பாக்காதவுங்க கண்டிப்பா பாத்துடுங்க . நாம எப்படி பிரேமானந்தா,  டாக்டர் பிரகாஷ், நித்தியானந்தா, சஹானா பத்தியெல்லாம் பரபரப்பா பேசுறோமோ அது மாதிரியே அமெரிக்க மக்களும் இந்த கொலைகள் பத்தி பரபரப்பா பேசிட்டு இருந்து இருக்காங்க. இந்த பரபரப்பை பணமாக்க விரும்பிய வார்னர் பிதர்ஸ் இது மாதிரியே ஒரு தொடர் கொலைகளை பற்றி கிளிண்ட் ஈஸ்ட்வூட்டை போலீஸ் ஹீரோவா வைச்சு ஒரு படமெடுத்தாங்க. படம் பயங்கர ஹிட் ஆனதோட இல்லாம ஈஸ்ட்வூட்டோட வாழ்க்கையிலையே முக்கியமான கதாப்பாத்திரம் ஆகிட்டு அந்த படத்தின் பெயர் தான் "Dirty Harry".

         நம்ம ஊர்ல இந்த மாதிரி பரபரப்பான விஷயங்களை அடிப்படையா வைச்சு புனையப்பட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி எடுத்து இருக்கார். அட்டோ சங்கரின் கதையை ஒட்டி எடுக்கப்பட்ட புலன் விசாரணை, வீரப்பன் பத்தி வந்த கேப்டன் பிரபாகரன், ராஜீவ் கொலையை பத்தி எடுக்கப்பட்டு15 வருஷம் கழிச்சு வந்த   குற்றப்பத்திரிக்கை அவ்வளவு தான் நியாபகம் வருது வேற எதாவது இருந்தா சொல்லுஙக..,




       எல்லாரும் சுகமா இருக்கிற ஒரு சுபதினத்துல நிச்சல் குளத்துல குளிக்கிற ஒரு பொண்ணுக்கு ஒரு புல்லட்டையும் மேயருக்கு ஒரு லெட்டரையும் ஒருத்தன் அனுப்புறான் ஒரு சைக்கோ கொலைக்காரன். அந்த லெட்டரில் தனக்கு ஒரு லட்சம் டாலர் கொடுக்கணும் இல்லைன்னா தினமும் ஒருத்தரை கொன்னுடுவேன்னு மிரட்டுறான். இந்த கேஸ் பாக்குற கிளிண்ட்  முதல்ல அவனை பிடிக்க சில பல பொறிகளை வைக்குறார் ஆனா அதுலலாம் சிக்காம தப்பிக்கிறதோட அவன் சொன்ன மாதிரியே தினமும் ஒருத்தர்ன்னு ரெண்டு பேர கொலை பண்ணிடுறான் அதுல ஒருததர் கறுப்பின சிறுவன் இன்னொருத்தர் பாதிரியார். நிலைமை சீரியஸாவதை உணர்ந்த மேயர் பணம் கொடுக்குறதா முடிவு பண்ணி அந்த பணத்தை  நம்ம கிளிண்ட் கைலையே கொடுத்து அனுப்பறார்.

     பணம் கொடுக்க போன நம்ம கிளிண்ட பணத்த கொடுத்தோமா பக்கோடா சாப்பிட்டோமான்னு இல்லாம அவனை பிடிக்க ட்ரை பண்றார் ஆனா அவன் அப்போ கால்ல ஒரு கத்திய வாங்குனதோட தப்பிச்சிடுறான். மறுபடியும் தேடி அவனை பிடிச்சிட்டு வரும் ஈஸ்ட்வூட் சும்மா அடி பின்னிடுறார். ஆனாலும் சாட்சி இல்லைன்னு அவன் எஸ்கேப் ஆகிடுறான். அதுக்கப்புறம் அவனை மறுபடியும் பிடிச்சாரா இல்லையா என்பதையெல்லாம் டவுன்டலோட் பண்ணி பாத்துக்கோங்க..,
      
      எங்கு தப்பு நடந்தாலும் சட்டத்தின் துணை தேடாமல் மனசாட்சியின் படி தட்டி கேட்க்கும் அல்லது தண்டிக்கும் மூக்கு மேல் கோபம் வருகின்ற Rough and Tough போலீஸ் கதாப்பாத்திரம் தான் Harry Callahan என்கிற Dirty Harry.  இது ஒன்று நமக்கு ரொம்ப அந்நியமான கதாப்பாத்திரம் கிடையாது சாமி, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஏகப்பட்ட படங்களில் விஜயகாந்த் மற்றும் அர்ஜுன் என தமிழ் மட்டுமில்லாம இது தாண்டா போலீஸ், அக்னி I.P.S, வைஜெயந்தி  I.P.S என்று தெலுங்கு வாலாக்கலாலும் நீண்ட நாளாக காட்டி வருவது தான். எனினும் இந்த மாதிரி கதாப்பாத்திரங்களுக்கெல்லாம் Dirty Harry தான் தொடக்கம் என்று சொல்கிறார்கள். இந்த கதாப்பாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாதவாறு அட்டகாசமாய் இருக்கிறார் ஈஸ்ட்வூட் அப்படி ஒரு கம்பீரம், மேன்லினெஸ். இந்த படத்தில் அந்த ட்ரெட்மார்க் .44 Magnum துப்பாக்கியோடு அவர் இருக்கும் ஸ்டில் ரொம்ப பிரபலம் நிறைய பேர் டிசர்ட்டில் அந்த படத்தோட சுத்துவதை பார்த்து இருக்கலாம்.



       கிளிண்ட் ஈஸ்ட்வுட் கொஞ்சம் முரட்டு தனமான இளைஞன் (இப்பவெல்லாம் வயசான இளைஞன்) அல்லது ரொம்ப முரட்டுதனமான இளைஞன் என பல வித்தியாசமான வேடங்களில் நடித்தவர் :). என்ன தான் ஒரே மாதிரியான கதாப்பாத்திரமாக இருந்தாலும் அவரோட ஸ்கிரீன் பிரஸென்ஸ அடிச்சுக்கவே முடியாது கிட்டதட்ட நம்ம ஊரு ரஜினி மாதிரி மாஸான ஆளு.நாயகனாக தன் காலம் முடிய தொடங்கியதை உணர்ந்து நடிப்பதை குறைத்து இயக்குநராக மாறி சில ஆஸ்கர்கள் வாங்கும் அளவுக்கு அதிலும் நிருப்பித்தவர் இதுக்காகவே ரொம்ப பிடிக்கும்.

           எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இவர் பஞ்ச் டயலாக் பேசும் ஸ்டைல் "My mistake. Four coffins... " என்று 34 வயதில் (A Fistful of Dollars - 1964) சொல்லும் போதும் சரி  "I'll blow a hole in your face then go inside and sleep like a baby."  என்று 78 வயதில் (Gran Torino - 2008) பஞ்சடிக்கும் போதும் போதும் சரி கொஞ்சம் கூட “கெத்து” குறையாமல் இருக்கும். இந்த படத்திலும் இவர் சொல்லும் வசனங்கள் எல்லாம் இன்னமும் செம பிரபலம்..,

 I know what you're thinking. "Did he fire six shots or only five?" Well, to tell you the truth, in all this excitement I kind of lost track myself. But being as this is a .44 Magnum, the most powerful handgun in the world, and would blow your head clean off, you've got to ask yourself one question: Do I feel lucky? Well, do ya, punk?

இது படத்தின் மிக பிரபலமான வசனம். இதை படிக்கும் போது அந்த ஃபீலிங் வருமான்னு தெரில ஆனா படம் பாக்கும் போது செமையா இருக்கும். இது மட்டுமில்லாம மத்த வசனங்களும் புல்லட் ஷார்ப் தான்..

Harry Callahan: Well, when an adult male is chasing a female with intent to commit rape, I shoot the bastard. That's my policy. 
The Mayor: Intent? How did you establish that? 
Harry Callahan: When a naked man is chasing a woman through an alley with a butcher's knife and a hard-on, I figure he isn't out collecting for the Red Cross! 
----------------------------
Harry Callahan: And who says that? 
District Attorney Rothko: It's the law. 
Harry Callahan: Well, then the law is crazy. 

        இந்த படத்தின் தொழில்நுட்ப குழுவினர் குறித்தோ மற்ற விஷயங்கள் குறித்தோ எழுத எதுவும் தோன்றவில்லை. படம் பார்த்து ஒரு வாரமாக போகுது ஆனா எப்போ இந்த படத்த பத்தி நினைச்சாலும் மூணு விஷயம் தான் நியாபகம் வருது Clint Eastwood, Harry Callahan மற்றும் Dirty Harry.

      உங்களுக்கு எண்பதுகளில் வந்த ரஜினி படம் பிடிக்குமா அதுவும் ஹீரோயின் பாட்டெல்லாம் இல்லாமல் ஆக்சன் மட்டும் உள்ள ரஜினி படம் என்றால் ??. ஆம் என்றால் இது நீங்கள் கண்டிப்பாக தவறவிடக்கூடாத படம்.

Dirty Harry - A .44 Magnum Opus ..,

[ Read More ]

சோளகர் தொட்டி [ச.பாலமுருகன்] ~ அதிகாரத்தின் பெருங்காதல்கள்

           சந்தன கடத்தல் வீரப்பனை யாரும் இன்னும் மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். வீரப்பன் மட்டுமல்ல அவருடைய பெரிய மீசையையும் அவரை பிடிப்பதற்க்காக தமிழக கர்நாடக போலீஸார்  மேற்கொண்ட மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ட  தேடல் வேட்டையும் இந்திய அளவில் ரொம்ப பிரபலம். வீரப்பன் கொல்லப்பட்ட செய்தியை அரை பக்க செய்தியாக சீன பத்திரிக்கையில் வந்ததாக தினதந்தியில் படித்தது நியாபகம் இருக்கிறது. ஆனால் அந்த தேடுதல் வேட்டையின் போது அந்த காடுகளில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த மக்களின் மீது  கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் ஏனோ அத்தனை பிரபலம் இல்லை. நமது அமைதிப்படையை போல் அண்டை நாட்டுக்கு போகும் வசதி இல்லாததால் சொந்த மண்ணிலேயே அதிரடிப்படையினரால் நிகழ்த்தப்பட்ட அத்தகைய கொடுமைகளுக்கு இலக்கிய சாட்சியாய் நிற்கிறது "சோளகர் தொட்டி".

           சோளகர் தொட்டி எனப்படும் பழங்குடி இன கிராமத்தின் கதை தான் இரண்டு பாகங்களாக பிரித்து இந்த புத்தகத்தில் சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில்  அவர்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள், கடவுள்கள், விழாக்கள் என அவர்களின் கலாச்சாரம் பெருங்கவனத்துடன் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டையால் ஏற்படும் பதற்றம், அவர்களின் அரம்பக்கட்ட விசாரணை ஏற்படுத்தும் பிரச்சனைகள், அதன் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் வன்முறை வெறியாட்டங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது.

      கொத்தல்லி, மாதி, பேதன், ஜோகம்மாள், கெம்பப்பாள், ஈரம்மா, புட்டன், மண்ணன், சிக்குமாதா,  கோல்காரன், ஜணையன், சித்தி என பரிச்சியமில்லாத பெயர் கொண்டவர்களை பரிச்சியமாகுவதில் முதல் பாகம் வெற்றி பெறுகிறது. சோளகர் தொட்டியின் இயல்பான காலத்தை தான் முதல் பாகத்தில் சொல்லி இருக்கிறார்கள் என்றாலும் அதுவும் அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. குடியானவர்களால் சுரண்டப்படுகின்றனர் , பரம்பரையாக இருந்த நிலத்தில் இருந்து அநியாயமாய் துரத்தப்படுகின்றனர். கொல்ல வந்த கரடியை கொன்று தின்றதற்க்காக சிக்குமாதா நிர்வாணமாய் வைத்து அடிக்கப்படுகிறான் மற்றும் அவனை விடுவிப்பதற்க்காக தொட்டியே கடனாளி ஆகிறது. இத்தனை சுரண்டல்களும் இன்னல்களும் இருந்தாலும் வாழ்க்கையை ஆடல், பாடல், கஞ்சா என கொண்டாட்டத்துடனே வாழ்கின்றனர்.

            இரண்டாம் பாகத்தின் ஆரம்பம் முதலே வீரப்பன் வேட்டையின் பெயரால் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டம் தொடங்கி விடுகிறது. முதலில் மன ரீதியாக டார்ச்சர் கொடுக்க தொடங்குகின்றனர். காவலர்களை பொறுத்த வரை வனத்தில் இருக்கும் எல்லா ஆண்களும் வீரப்பனுக்கு உதவுபவர்கள், எல்லா பெண்களும் வீரப்பன் கூட படுத்தவர்கள், எல்லா குழந்தைகளும் வீரப்பனுக்கு பிறந்தவர்கள். சித்ரவதைகளின் போது வலிக்குது என்று சொல்பவர்களிடம் எல்லாம்  "வீரப்பன் கூட படுக்கும் போது மட்டும் சுகமா இருந்துச்சோ " என்ற கேள்வி மறக்காமல் கேட்கப்படுகிறது. காவல்துறையினர் தங்கி இருக்கும் முகாம்களின் சித்ரவதை படுத்துவதற்க்கென்றே "வொர்க் ஷாப்" ஒன்று இருக்கிறது அதில் சாதாரண சிதரவதை போக புது வகையான சித்ரவதைகளும் செய்கின்றனர்.

      கணவன் கண்முன்னே மனைவி கற்பழிக்க படுகிறாள் வேண்டாமென்று கெஞ்சும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அடி விழுகிறது, தந்தையை மகனும் மகனை தந்தையும் செருப்பால் அடிக்க வேண்டும் இல்லையெனில் இருவருக்கும் காட்டுதனமான அடி கிடைக்கும், கட்டைவிரலை மடக்கி வைத்து மணிக்கட்டுடன் சேர்த்து கட்டி வைப்பார்கள் அப்படி செய்தால் அவர்களால் வாழ்க்கை முழுவதும் கட்டை விரலால் எதையும் தூக்க முடியாது, எட்டு மாத கர்ப்பிணியை நான்கு பேர் கொடுரமான முறையில் கற்ப்பழிக்கின்றனர், காவலர்கள் அனுமதித்தால் மட்டுமே யாரக இருந்தாலும் உடை அணிந்து கொள்ளவேண்டும் அதுவும் விசாரணையின் போது ஆண் பெண் பேதமில்லாமல் அனைவரும் நிர்வாணம் தான், காது மடல்கள், மார்பு காம்புகள், பிறப்புறுப்பு என கிளிப்புகள் மாட்டப்பட்டு மின்சாரம் செலுத்தப்படுகிறது, மின்சாரம் செலுத்தும் போது பீதியினால் மலம் கழிப்பவர்களின் வாயில் அந்த மலம் திணிக்கப்படுகிறது, பகலெல்லாம் இப்படி விசாரணை செய்யப்படும் பெண்கள் இரவுகளில் ஆறேழு பேரால் வண்புணர்ச்சி செய்யப்படுகின்றனர், "என்னை என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க எம்மகளை விட்டுறுங்க" எனக் கதறும் தாயின் மகளை எல்லாரும் இருக்கும் அறையில் நிர்வாணமாக கட்டி வைத்து அனைவரையும் பார்க்க சொல்கின்றனர் பார்க்காதவர்களுக்கு அடி விழுகிறது அதே நிலையில் அந்த பெண் வண்புணர்ச்சி செய்யப்படுகிறார். இவை யாவும் நடந்தது நாஜி முகாம்களில் அல்ல செய்தவர்கள் சிங்களர்களோ வேறு இனத்தவர்களோ அல்ல நீங்களும் நானும் பேசும் மொழியை பேசுபவர்கள் வணங்கும் கொடியை வணங்குபவர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

 
       
                "1999 தொடங்கி 2002 வரை சதாசிவம் கமிஷன் முன்பு சாட்சியம் சொல்வதற்காக பழங்குடி மக்களை அழைத்து வந்தோம். அந்த மக்கள் ஒவ்வொருவரும் விவரித்த சித்ரவதைகள் எல்லோரையும் குலை நடுங்க வைத்தன. காவல் துறையால் அடித்து உதைத்து முட மாக்கப்பட்டவர்கள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவர்கள், வீடுகள் எரிக்கப்பட்டு ஊரைவிட்டுத் துரத்தப் பட்டவர்கள் என அவர்களின் வாழ்க்கையே சிதைக்கப் பட்டு இருந்தது. போலீஸ் சித்ரவதையால் பல பேர் பைத்தியங்களாகத் திரிந்தார்கள். அரச வன்முறையின் கோரமான முகத்தை ஆவணமாகப் பாதுகாக்க வேண் டிய தேவையும் இருந்தது. 'சோளகர் தொட்டி' என்ற நாவல் இப்படித்தான் உருவானது"  என்ற தனக்கு ஏற்ப்பட்ட அதிர்வை சொல்கிறார் வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான  ச.பாலமுருகன். நாவலின் இரண்டு பாகத்திலும் வழக்கமாக கதை சொல்வத்ற்க்கான அழகியலை தவித்து இருப்பதால் ரொம்பவே ஆவணத்தன்மையுடன் சொல்லப்பட்டு இருக்கிறது. சொல்லப்படும் கதைகள் எல்லாம் கதைகளாக உணராமல் உண்மை சம்பவங்களை போல் உணர்வதற்க்காக திட்டமிட்டே ஆவணத்தண்மையுடன் சொல்லப்பட்டிருப்பதாகவும் தோன்றுகிறது. என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்திய விஷயம் நாவலின் முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சோளகர்களின் வாழ்க்கை முறை. இத்தனை நுணுக்கமாக சொல்வதற்க்கு குறைந்தது சில வருஷங்களாவது  அவர்களுடன் நெருக்கமாக வாழ்ந்து இருக்க வேண்டும்.

         இந்த புத்தகம் வீரப்பனுக்கு ஆதரவாக எழுதப்பட்டது என்று ஒரு விமர்சனம் இணையத்தில் உலாவுகிறது ஆனால் அது உண்மை அல்ல. விரப்பனுக்கும் அரசுக்கும் இடையே சிக்கி சிதைந்து போன மக்களின் வாழ்க்கையை மட்டுமே இந்த புத்தகம் சொல்கிறது.

       வீரப்பனை கொன்றாகிவிட்டது, பாராட்டு விழா முடிந்தாகி விட்டது, பதக்கங்களும் வீட்டு மனைகளும் கொடுத்தாகிவிட்டது ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை :(.

பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை      : 120 ரூபாய்

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்..,
        
[ Read More ]

The Dark Kight Rises - எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா கிரிஸ்டோபர் நோலன் !!

         ஃபேஸ்புக்கிலோ பதிவுலகிலோ எங்கு திரும்பினாலும் எங்கும் பேட்மேன் பற்றிய பேச்சு தான். பேட்மேன் காமிக்ஸ் குறித்தோ, கேரக்டர்கள் குறித்தோ, பேட்மேனின் சைக்காலஜி குறித்தோ, முந்தைய படங்கள் குறித்தோ ப்ளாக் வைத்திருக்கும் அனைவரும் எழுதி தீர்க்கின்றனர். ப்ளாக் இல்லாதவர்கள் தங்கள் Profile Picture ஆகவும் Cover Photo ஆகவும் பேட்மேனையும் கிரிஸ்டோஃபர் நோலனையும் வைத்து ஹைப் ஏற்றுகின்றனர். இந்த அளவுக்கு வேறு எந்த ஆங்கில படத்திற்க்காகவும் தமிழ் இணைய உலகிம் தீப்பற்றி எரிந்ததாக நினைவில்லை. நம்ம ஊர்ல தான் இப்புடின்னா அமெரிக்கால இன்னும் ஓவரா போறாங்க படம் நல்லா இல்லன்னு விமர்சனம் எழுதுன ஒரு வெப்சைட் சர்வரையே ரசிகர்கள் டவுன் பண்ணிடாங்களாம். நெகடிவ் விமர்சனங்கள் வந்தால் ரசிகர்கள் கொலைவெறியாவதை கண்டு Rotten Tomatoes விமர்சன பகுதியையே  படம் வரும் வரை மூடிவிட்டது. நேற்றிரவு IMDB தளத்தில் 9.6 மதிப்பெண்கள் இருந்தது இன்னிக்கு பாத்தா மொத்தம் 5 ரேட்டிங் தேவைன்னு போர்டு மாட்டி இருக்காங்க ஆனா 52 பேர் விமர்சனம் எழுதி இருக்காங்க :))) .


        எல்லாரும் எழுதும் போது நானும் எழுத வேன்டுமா என யோசித்து கொண்டிருக்கும் போது என்னுடைய வாசகர் கிரிஸ்டோபர் நோலன் டிவிட்டரில் போன் செய்து எழுத சொன்னதால் மட்டுமே இந்த உலக மகா பதிவை எழுதுகிறேன் என்பதை மனதில் நிறுத்தி தொடர்ந்து படிக்கவும்  :))). படத்துக்கு இந்த அளவுக்கு ஹைப் ஏற முக்கியமான மூன்று காரணங்கள் கிரிஸ்டோபர் நோலன்,  ஜோக்கராக Heath Ledger மற்றும் மார்கெட்டிங்.

        நோலன் ஒரு மோசமான படமென்ன சுமாரான படம் கூட இன்னும் எடுக்காதவர். படம் பார்க்கும் ரசிகனின் முளைக்கு தொடர்ச்சியாய் வேலை கொடுக்கும் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியர். மிக பெரிய ரசிக கூட்டத்தை சம்பாதித்து வைத்து இருப்பவர் இந்த படத்திற்க்கு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் இவரின் பெயரே ஏதோ மந்திரம் போல ரசிகர்களை தன் வசம் இழுக்க போகிறது. இந்த படத்தை மட்டும் இவரை தவிர வேறு யாரேனும் இயக்கி இருந்தால் யாரும் இப்படி கண்ணில் விளக்கெண்ணை விட்டுகொண்டு எதிர்ப்பார்க்கமாட்டார்கள்.


       அடுத்ததாக ஜோக்கர்.., என்ன பெர்ஃபாமென்ஸ்டா அது !!. நான் டிம் பர்டனின் பேட் மேன் இன்னும் பார்க்கவில்லை ஆனாலும் ஆளானப்பட்ட ஜாக் நிக்கல்ஸனால் கூட இந்த மாதிரி ஒரு வெறிதனமான நடிப்பை கொடுத்திருக்க முடியாது. The Dark Knight வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னமும் பலரும் ஃபேஸ்புக்கிலும், லேப்டாப்களிலும், மொபைலிலும் வால்பேப்பராகவும் ப்ரொஃபைல் பிக்சராகவும் வைத்துள்ளனர். சினிமா வரலாற்றின் மிக சிறப்பாக நடிக்கப்பட்ட கதாபாத்திரங்களை பட்டியலிட்டால் ஜோக்கராய் வாழ்ந்த Heath Ledger-ஐ யாராலும் மிஸ் செய்யமுடியாது.

      
     கடைசியாக வார்னர் பிரதர்ஸின் வைரல் மார்கெட்டிங்.., படம் தொடங்கிய நாள் முதலே உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் எதிப்பார்க்க தொடங்கிவிட்டாலும் ஊரில் உள்ள அனைவருக்கும் பேட்மேன் ஜூரம் வருமளவிற்க்கு ஹைப் ஏற்றிவிட்டது என்னவோ இவர்களின் மார்கெடிங் தான். ஆரம்பத்தில் ஒரு சின்ன டீசர் அப்புறம் சின்ன இடைவெளிக்கு பிறகு ஒரு டிரைலர் அதன் பிறகு மற்றுமொரு டிரைலர் என எதிர்பார்ப்புகளை எகிற செய்தது அதுவும் டிரைலர் என்றால் ஆக்சன் காட்சிகளின் தொகுப்பாக இல்லாமல் சிறு சிறு கேள்விகள் எழுமாறு செய்து ரசிகர்களிடையே விவாதங்களை கிளப்பிவிட்டது முக்கியமாக பேட்மேன் இறுதியில் இறந்துவிடுவாரா இல்லையா என்ற விவாதம். ட்ரைலர் குறித்த கருந்தேளின் விரிவான அலசலை படிக்க இங்கே கிளிக்கவும். இந்த டிரைலர்களோடு Nokia, Cadburys என பல விளம்பரங்களிலும் படத்துக்கான விளம்பரமும் சேர்ந்தே வருகிறது அதிலும் Nokia விளம்பரம் செம..,

        நோலன் இந்த படத்தில் The Dark Knight படத்தை மிஞ்ச வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகும் ஆனால் Dark Knight-ல் தொட்ட உச்சத்தை இதில் தொட்டாலே எல்லோரும் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் எனபது உறுதி. இரண்டு படங்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் படத்தின் வில்லன்கள் ஜோக்கரின் மிகப்பெரிய ஆளுமையை பேனால் ஈடுசெய்யமுடியுமா என்பதே இப்போது 250 மில்லியன் டாலர் கேள்வி. எப்பவும் பரபரப்பாக இயங்கும், மக்களை விளையாட்டு பொம்மைகளாக நினைக்கும், தனக்கு சமமான போட்டியை எதிர்பார்க்கும் ஜீனியஸான ஜோக்கர் ஏற்படுத்தும் மனரீதியான நெருக்கடிகளும் அதை பேட்மேன் எதிர்கொள்ளும் விதமுமே டார்க் நைட்டின் பரபரப்பான திரைக்கதைக்கு காரணமாகும். இத்தகைய பரபரப்பை மிருகபலம் கொண்ட பேனை வைத்து உருவாக்க எத்தகைய காட்சிகளை நோலன் உருவாக்கி இருக்கிறார் என்பது படம் பார்த்தால் மட்டுமே தெரியும். இதில் கொஞ்சம் பிசகி இருந்தாலும் ரசிகர்களை திருப்திபடுத்துவது பிரச்சனையாகி விடும்.

          படத்தின் மீதிருக்கும் அதீத எதிர்பார்ப்பு வசூலுக்கு எந்த அளவுக்கு துணை செய்கிறது அந்த அளவுக்கு படம் திருப்தி தராமல் போக வாய்ப்புள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் இந்த வருடத்தின் சிறந்த படம் இது தான் என்றும் வாழ்கையிலே இப்படி ஒரு இனி வரபோவதில்லை என்றும் பேச தொடங்கிவிட்டனர். அவதாரை முந்த போகிறது Avengers-ஐ தான்ண்ட போகிறது என்று  ஃபோட்டோ எல்லாம் ஃபேஸ்புக்கில் போட ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வளவு எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களை திருப்திபடுத்துவது எந்த இயக்குநருக்கும் நோலனுக்கு கூட சுலபமானதல்ல.

            ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் கூட படம் வசூலில் சாதனை செய்யதான் போகிறது ஆனால் நோலனிடம் எதிர்பார்ப்பது வெறும் வசூல் சாதனையல்ல..., சனிக்கிழமை படம் பார்க்க போகிறேன் அத்தனை எதிர்பார்ப்புகளையும் நோலன் பூர்த்தி செய்வார் என நம்புவோமாக !!
[ Read More ]

மிஷ்கினின் "முகமூடி" அல்லது சோடா மூடி : ஒரு புரட்சியின் தொடக்கம்

 உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு மனம் 
கொதித்து பதிவோ ஸ்டேடஸோ டிவிட்டோ போட்டால் நீயும் எனக்கு நண்பனே..,
 - பிரபல பதிவர் ..,

        எல்லாருக்குமே சூப்பர் ஹீரோ ஆகணும்ன்னு ஒரு கனவு, லட்சியம், வெறி எல்லாம் உண்டு  ஆனால் அதற்க்கான வாய்ப்புகள் யாருக்கும் அமைவதில்லை. மனைவியிடம் செல்போனை கொடுக்கும் அரை நொடி நேரத்தில் ஆபிஸ் ஃபிகர் அனுப்பிய மெஸேஜை டெலீட் செய்வது, மேனேஜர் திரும்பும் கணப்பொழுதில் ஃபேஸ்புக்கில் வந்திருக்கும் தோழியின் சாட்க்கு பதில் சொல்வது என சிறு சிறு சாகசங்களோடு சூப்பர் ஹீரோ கனவு நீர்த்துவிடுகிறது. நாம தான் சூப்பர் ஹீரோ ஆக முடியல சூப்பர் ஹூரோ படம் பார்த்தாவது அந்த வெறிய தீத்துக்கலாம்ன்னு பாத்தா அதுவும் முழு திருப்தி கொடுக்கல.  இது வரைக்கும் உள்ள எல்லா சூப்பர் ஹீரோக்களும் நியூ யார்க் , வாஷிங்டென் மாதிரி ஊர தான் காப்பாத்துறாங்க நம்ம சென்னை , மதுரை பக்கம் எட்டி கூட பாக்க மாட்டானுங்க அட அத கூட பொறுத்துக்கலாம் ஆனா அவுனுங்க டாவடிக்கிற பொண்ணுங்ககெல்லாம் ஆண்டியாவே இருக்காங்க என்ன கொடுமைடா !!!. இப்படி ஒரு சூப்பர் ஹீரோவுக்கு கூட வெள்ளையனை பார்த்து ஏங்குவது தமிழனை பிடித்த சாபமன்றி வேறொன்றுமில்லை.

         636 பேரை தனியா நின்னு சாமாளிக்கிற நம்ம ஹீரோல்லாம் என்ன சாதாவா சூப்பர் ஹீரோ இல்லையான்னு சில விஷமிகள் கேள்வி எழுப்பலாம். தமிழன் முன்னேறுவதில் எரிச்சலடையும் எத்தர்களின் முகமூடி விரைவில் கிழியும் என்பதை மனதில் நிறுத்தி அவர்கள் சொல்வதற்க்கு செவிமடுக்காமல் மேற்கொண்டு படிக்கவும். தமிழனின் இன்னலை உணர்ந்து சென்னையை காப்பற்ற, தாமிரபரணியை உறைய வைக்க, இருபது வயது ஃபிகரை டாவடிக்க நமக்கே நமக்கென ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்க வேண்டும் என நினைப்பவர்கள் பதிவின் ஆரம்ப வரிகளை படித்துவிட்டு தொடரவும். சூப்பர் ஹீரோ படமெடுப்பது ஒண்ணும் அத்தனை சுலபமான வேலை கிடையாது பல தகுடுதனங்கள் செய்ய வேண்டி உள்ளது. முதலில் போஸ்டர் தயாரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் மற்ற ஈரவெங்காயங்களை பின்னால் உரிக்கலாம்.

         முதலில் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். உதாரணமாக உங்களுக்கு பேட்மேன் ரொம்ப பிடித்து இருந்தால் அவரையே வைச்சுக்கலாம் ஆனால் அப்படியே பயன்படுத்தினால் ஹாலிவூட்காரன் கண்டுபிடிச்சான்னா டவுசர கழட்டிருவான் சோ யூ மஸ்ட் பீ வெரி கேர்ஃபுல் இன் தீஸ் ஸுட்டிவேஷன்ஸ் அதாவது சூதானமா இருக்கனும் மாமே.., அது நாமே புதுசா கண்டுபிடிச்ச சூப்பர் ஹீரோன்னு டகில் விடுற அளவுக்கு மாற்றங்கள் செய்ய வேண்டும் அதுக்காக முளைய ஓவரா கசக்க வேண்டியதெல்லாம் இல்ல உத்து பாத்து யாராவது கண்டுபிடிச்சிட்டாலும் பேசி சமாளிக்க தெரியனும் அது தான் ரொம்ப முக்கியம் . கறுப்பு கலர்ல சட்டை போட்டா காத்து கறுப்பு எதாவது அடிக்கும்ன்னு சொல்லி பேட்மேன் காஸ்ட்யூம் மொத்ததையும் ஊதா கலருக்கும் மாத்தனும். அதுக்கப்புறம் பேட்மேனின் தலைக்கு மேல் கொம்பு போலிருக்கும் காதுகள் எதுக்கு தேவையில்லாம இது போல ஹீரோக்களை உருவாக்கும் நமக்கு ஏற்க்கனவே தலைக்கு மேல் கொம்பு உள்ளதால் அந்த கொம்புகளை வெட்டி வீசவும் அவ்வளவு தான் சூப்பர் ஹீரோ தயார்.

     அடுத்து போஸ்டர் தான். புது சூப்பர் ஹீரோவுக்கு பேட்மேனை தேர்ந்தெடுத்திருந்தால் போஸ்ட்ருக்கும் அதையே தேர்ந்தேடுப்பது தான் புத்திசாலிதனம் சந்தேகமிருந்தால் பிரபல பதிவர்களிடம் விசாரித்து கொள்ளவும்.

       இது தான் நீங்கள் தேர்தெடுத்த ஒரிஜினல் போஸ்டர் என்றால் பின்வரும் மாற்றங்களை வரிசையாக செய்யவும்..,

1) போன பத்தியில் சொன்னது போல் பேட்மேனின் உடையின் கலரையும் தலையில் உள்ள கொம்பு காதையும் நீக்கி விடவும்..,

2) இடதுபுறமாக பார்த்தபடி இருக்கும் ஹீரோவை அபவ்டர்ன் சொல்லி வலதுபுறமாக திருப்பவும்..,

3) மஞ்சள் கலரில் இருக்கும் பேக்கிரவுண்ட் வானத்தையும் ஊதா கலருக்கு மாற்றி கொள்ளவும்..,

4)  பேட்மேனுக்கு கீழ் இருக்கும் வவ்வால்களை துரத்தி விடவும்..,

5) ஹீரோவின் முகத்திற்க்கு ஜூம் போகவும்..,

6) ஒரிஜினல் படத்தின் பெயரை அழித்து விட்டு உங்கள் படத்தின் பெயரையும் அந்த இயக்குநர் பேரை அழித்துவிட்டு உங்கள் பெயரையும் எழுதி கொள்ளவும்..,

அவ்வளவு தான் முடிந்தது உங்களுக்கான சூப்பர் ஹீரோ கிடைத்து விட்டார் :))


எச்சரிக்கை : இது போஸ்டர் உருவாக்குவது எப்படி என்பதை விளக்கும் டெக்னிக்கல் பதிவு மட்டுமே நீங்களாக எதாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு கம்பேனி பொறுப்பாகாது..,

Courtesy :  சமீபத்தில் திரு,மிஷ்கின் அவர்கள் கொடுத்த பேட்டி ஒன்றில் இருந்து பதிவின் தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது.
                  
தேவைப்பட்டால் தொடரும்...,
      
[ Read More ]

5 Centimeters Per Second [ Japanese/2007 ] - நிரம்பி வழியும் காதல்..,

         யாரோ ஒருவருடன் பேசுவதற்க்காக மட்டுமே பள்ளிகூடத்திற்க்கோ கல்லூரிக்கோ போவதாக உணர்ந்து இருக்கிறீர்களா ? யாரோ கொடுத்த சாக்லேட்டின் ரேப்பர்களை பத்திரப்படுத்தி இருக்கிறீர்களா ?  ஷாப்பிங் மாலிலோ ரயில்வே ஸ்டேஷனிலோ யாரையேனும் எதிர்பார்க்கமல் சந்திக்க எதிர்பார்த்து இருக்கிறீர்களா? தூரத்தில் நடக்கும் ஒரு பெண் அவள் போல் இருக்க ஆசையுடன் அருகில் போய் ஏமாந்து இருக்கிறீர்களா ? வாழ்க்கையில் ஒருமுறையேனும் காதலித்து இருக்கிறீர்களா ?
            இந்த கேள்விகளுக்கு ஏதேனும் ஒன்றுக்கு உங்கள் பதில் ஆம்  எனில இது உங்களுக்கான படம்...,


        இது எப்படிப்பட்ட படம் என்று மேலே இருக்கும் பத்தியை படிக்கும் போதே ஒருவாறாக கற்பனை செய்து இருப்பிர்கள் ஆனால் இது ஒரு அனிமேஷன் படமாக இருக்கும் என எதிர்ப்பார்த்தீர்களா.., Yes it is :) . 5 Centimeters Per Second என்ற படத்தின் தலைப்பு செர்ரி பூக்களின் இதழ்கள் உதிர்ந்து விழும் வேகமாகும். இந்த தலைப்பு மனித வாழ்க்கையின் மந்த தன்மையையும் ஒன்றாய் இருக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலக தத்தம் வாழ்க்கைகாய் விலகி செல்வதின் குறியீடு அப்புடின்னு நா ஒண்ணும் கண்டுபிடிக்கல விக்கிபீடியா சொல்லுது :).  62 நிமிடங்கள் மட்டுமே ஓட கூடிய மிக சிறிய படமான இது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது..,

Episode I : Chasing Cherry Blossoms

     மத்திய தொண்ணூறுகளில் படத்தின் முதல் பகுதி நடக்கிறது. ஆரம்ப பள்ளியின் இறுதி நாளில் நெருங்கிய நண்பர்களான டகாகி மற்றும் அகாரி பள்ளி முடிந்து வருகின்றனர். அகாரியின் பெற்றோர் வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வதால் இனி பார்க்க முடியாது என்றாலும் அடுத்த வருடம் இதே காலத்தில் அவனுடன் இருக்க விரும்புவதாகவும் கூறி செல்கிறாள் அதன் பிறகு  இருவரும் கடிதம் மூலமே உரையாடி கொள்கின்றனர். ஒரு வருடம் கழித்து அவளை பார்ப்பதற்க்காக டகாகி ரயிலில் அகாரி ஊரை நோக்கி செல்கிறான். அன்று இரவு 7 மணிக்கு சந்திப்பதாக அகாரியை சந்திப்பதாக போட்ட ப்ளான் கடும் பனி பொழிவினால் ரொம்பவே சொதப்பி விடுகிறது. 8.30 மணிக்கு பாதி தூரம் மட்டுமே சென்று இருக்கிறான். இருவரும் சந்தித்தார்களா இல்லையா என்ற சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை நீங்களே பாருங்கள்.

Episode II :Cosmonaut

          செல் ஃபோனும் இன்டர்நெட்டும் அறிமுகமாகிவிட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் படத்தின் இரண்டாம் பகுதி நடக்கிறது. காலப்போக்கில் அகாரி உடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துவிட்ட டகாகி புதிய பள்ளியில் யாருடனும் ஒட்டாமல் தனியாகவே இருக்கிறார். அதே பள்ளியில் படிக்கும் சுமேடா டகாகியை பார்த்த நாள் முதலே காதலிக்க தொடங்கிவிடுகிறார் ஆனாலும் தன் காதலை வெளிப்படுத்த தைரியமின்றி இருக்கிறாள். கொஞ்ச காலத்தில் இருவருக்கும் ஒரு மெல்லிய நட்பு உருவாகிறது ஆனாலும் அதற்கு மேல் அவளால் நெருங்க முடியவில்லை. இருவரும் தனியாக இருக்கும் சமயத்தில் தன் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்து தோற்று போகிறாள்.



Episode III : 5 Centimeters Per Second

          சில வருடங்களுக்கு பிறகு., டகாகி கம்ப்யூட்டர் ப்ரோகிராமராக டோக்கியோவில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். சுமேடா இன்னும் உன்னை காதலிக்கிறேன் என டகாகிக்கு மின்னஞ்சல் அனுப்பி கொண்டிருக்கிறார்.  திருமணத்திற்க்கும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் வேலை காரணமாக டோக்கியோவுக்கு பயணமாகிறார் அகாரி. ஒரு முறை ரெயில்வே கிராஸிங்கை தாண்டி செல்லும் போது எதிரில் வந்த பெண் அகாரியாக இருக்குமோ என திரும்பும் போது சரியாக அதே நொடியில் ஒரு ரெயில் வந்து பார்க்க விடாமல் செய்கிறது. அப்போது ரொம்ப ரொம்ப அழகான பாடல் வருகிறது. அப்பாடல் முடிந்ததும் அந்த பெண் அகாரியா ? இருவரும் இணைந்தார்களா ?  போன்ற விஷயங்களை எல்லாம் திரையில் காண்க..,

     இந்த கதையை படிக்கும் போது இது ரொம்பவும் சாதாரணமாக இருப்பதாக நீங்கள் உணரலாம் ஆனால் திரையில் இந்த படம் ஏற்படுத்தும் பாதிப்புகள் ரொம்பவே அதிகம். காதலை பிரிந்ததால் ஏற்படும் தனிமையையும் , பழைய காதலை நினைக்கும் போது ஏற்படும் துக்கமும் மகிழ்ச்சியும் நிறைந்த கலைவையான உணர்ச்சியையும் அழகான காட்சிகளின் மூலம் வெகுசுலபமாக பார்வையாளனுக்கு கடத்தி விடுகிறது. சிறுவயதில்  நெருக்கமாய் இருந்தவர்கள் செல்ஃபோனும் இணையமும் இல்லாமல் கால ஓட்டத்தில் காணாமல் போனதை எந்தவிதமான மிகையும் இல்லாமல் காட்டுகிறது. படத்தில் உரையாடல்கள் மிகவும் குறைவு முக்கிய பாத்திரங்கள் மூவரும் அவர்கள் மனதுக்குள் நினைப்பதே வசனங்களாக வருகிறது. பெரும்பாலான வசனங்கள் க்யூட்டான கவிதையாக இருக்கின்றன.


          படம் முழுவதுமே நட்பு, பிரிவு, தனிமை,  ஏக்கம், காதலை நோக்கி பயனித்தல், காதலுக்காக காத்திருத்தல் என காதலின் அத்தனை உணர்வுகளையும் கொண்டு காட்சிகளை நிரப்பி படம் முழுவதுமே படுரொமாண்டிக்காக இருக்கிறது. இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததை போல் வருகிறது அந்த கிளைமேக்ஸ் பாடல் அதுவரை படம் ஏற்படுத்திய உணர்வுகளை இன்னொரு லெவலுக்கு இந்த பாடல் எடுத்து செல்கிறது அதிலும் அந்த பாடல் வரிகள் அற்புதம் (அந்த மொழி தெரியுமான்னு கேக்க கூடாது எல்லாம் சப்டைட்டில் தான் :) ). முதன்முறையாக என் கம்ப்யூட்டரில் ஒரு ஜப்பானிய பாடல் திரும்ப திரும்ப ஓடி கொண்டிருக்கிறது. அந்த அற்புதமான பாடல் உங்களுக்காக..,


படத்தின் இன்னுமொரு முக்கிய ப்ளஸ் இதில் வரும் அனிமேஷன் அதுவும் ரொம்பவும் அழகாக எடுக்கப்பட்டுள்ளது. ரொம்பவே டெம்ப்ளேட்டாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு அனிமேஷன் படம் என்பதையே நாம் மறக்கும் அளவிற்க்கு இருக்கிறது. நான் பார்த்த மிக சிறந்த 2D அனிமேஷன்களில் இந்த படத்தின் அனிமேஷனையும் எந்த யோசனையுமின்றி சேர்த்து கொள்வேன். இந்த படத்தை எழுதி தயாரித்து இயக்கி இருப்பவர் Makoto Shinkai என்ற ஜப்பானிய இயக்குநர். ஜப்பானிய விமர்சகர்கள் இவரை அடுத்த மியாசாகி என்றுழக்கும் அளவிற்க்கு நம்பிக்கை தருபவராக இருக்கிறார்.

    எவ்வளவோ யோசித்தும் குறையென்று எதுவும் சொல்ல தோன்றவில்லை அவ்வளவு பிடித்துவிட்டது. ஏதேனும் ஒரு விடுமுறை நாளில் ஒரு மணிநேரம் மட்டும் செலவு செய்து இந்த படத்தை பாருங்கள் அட்லீஸ்ட் ஒரு நாளுக்காவது அந்த பாதிப்பு இருக்கும் நிச்சயமாக...


     
          
[ Read More ]

சகுனி - 1 Line Review


Only One Line :
          கேக்குறவன் கேணையனா இருந்தா கேப்பையில் இருந்தும் நெய் வடியுமாம்..,

Verdict : போய்டாதிங்ங்ங்ங்ங்ககக....,

கொசுறு :
படத்தின் ஒரே ஆறுதல் ஒன்பதே முக்கா நிமிஷம் வரும் பிரணிதா..,

[ Read More ]

மறுபடி பார்க்க விரும்பாத படங்கள்..,

            ஒரு புத்தகமோ திரைப்படமோ காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்பதற்க்கு மறுவாசிப்பும் மீள்பார்வைகளும் மிகவும் அவசியமாகின்றன. நமக்கு பிடித்த எல்லா புத்தகத்தையும் திரைப்படத்தையும் இன்னொரு முறை ஸ்பரிசிக்க அத்தனை சுலமபாய் தோன்றிவிடுவதில்லை. பெரும்பாலவானவற்றை மீண்டும் பார்க்க கூடாதென முடிவெடுத்தாலும் வெகுசிலவற்றை தான் "கொய்யால உசுரே போனாலும் பாக்க கூடாதுடா"ன்னு கங்கணம் கட்டிக்குவோம். அந்த அளவுக்கு என்னை உசுப்பேத்திய நான்கு படங்களை பற்றிய சிறு பார்வைதான் இந்த வெட்டி பதிவின் நோக்கம். நான்கு படங்களுமே முற்றிலும் வெவ்வேறு வகையானவை நான்கும் வெவ்வேறு மொழிகள் , வெவ்வேறு Genre, வெவ்வேறு வகையில் என்னை பாதித்தவை வெட்டி பில்டப்புகள் போதும் என நினைக்கிறேன் மேற்கொண்டு படிச்சிட்டு இந்த படங்களை பார்ப்பதா வேண்டாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..,

A Serbian Film :
       
          இளகிய மனது உடையவர்கள் , சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்படுபவர்கள் , கலாச்சார காவலர்கள், 15 வயதுக்கு குறைவானவர்கள், இந்த படத்தின் பேர் கேட்டாலே எரிச்சலடைபவர்கள் அனைவரும் இந்த படத்தையும் அடுத்த படத்தையும் ஸ்கிப் செய்வது அனவருக்கும் நல்லது..,

          ஒரு முன்னால் நீலப்பட நடிகனான நாயகன் ரொம்பவும் பண கஷ்டத்தில் இருக்கிறான் மகனின் பள்ளி செலவுக்கு கூட பாக்கெட்டை தடவும் நிலை. அவனுக்கு ஒரு கலைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது அதன் மூலம் அவனுக்கு பெரும் தொகையும் கிடைப்பதால் சம்மதிக்கிறான். உண்மையில் அது கலைப்படம் அல்ல அது ஒரு Snuff Film என தெரிய வருகிறது.அப்புறம் என்ன நடக்கிறது என்பது தன் படத்தின் கதை. அது இன்னாப்பா Snuff Film ன்னு கேக்குறிங்களா ? அது ஒண்ணுயும் இல்ல எல்லா நிலப்படத்தையும் போலவே மேட்டர் நடக்கும் அதுவும் கொடூரமாய் கடைசியாய் இருவருமோ அல்லது ஒருவரோ கொலை செய்யப்படுவார்கள். ஆம், நிஜமாகவே கொலை செய்யப்படுவார்கள். இதற்க்கே அதிர்ச்சி அடைபவர்கள் அடுத்த பத்தி போகாமல் அப்பீட்டாவதே நல்லது..,

         குடும்ப அமைப்பில் வாழ்ந்த எந்தவொரு மனிதனாலும் அத்தனை சுலபத்தில் ஜீரணிக்க இயலாத காட்சிகள் நிறைந்த படமாகும். கர்பமாக இருக்கும் பெண்ணுக்கு ஒரு தடியன் பிரசவம் பார்க்கிறான் அப்போது பிறக்கும் குழந்தையை அதே தடியன் கற்பழிக்கிறான்.., எஸ், புதிதாய் பிறந்த குழந்தையை தான். இன்னொரு காட்சியில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெண்ணை ஒருவன் கற்பழித்த படியே வெட்டி கொள்கிறான், போதை மருந்து அதிகம் செலுத்தப்பட்ட ஹீரோ மயக்கமடைந்து இருக்கும் தன் மகனையே கற்பழிக்கிறான்.., இதெல்லாம் கூட பரவாயில்லை (என்னது பரவாயில்லையா ??) கிளைமேக்ஸில் ஹீரோ , அவனின் மனவி மற்றும் மகன் இறந்து கிடக்க அப்போது ஒரு தடியன் "let's start with the small one" அப்புடின்னு சொல்லுவான் பாருங்க என்ன சொல்றது அப்புடியே உறைஞ்சு போய்ட்டேன்.., இந்த படம் பாருங்கன்னு யாருக்கும் சிபாரிசெல்லாம் பண்ணல இதெல்லாம் படிச்சதுக்கு அப்புறமும் பாக்கனும்ன்னு தோணிச்சுன்னா பாருங்க..,

Audition :

         இந்த படத்தை இந்த லிஸ்ட்டில் சேர்க்க வைத்த காட்சி..,
        " காதலி , செகரக்டரி, மகனின் காதலி, வேலைக்காரி என தனக்கு தெரிந்த அத்தனை பேருடனும் நாயகன் உறவு கொள்வதை போல காட்சிகள் மாறி மாறி சர்ரேலிஸ சாயலுடன் காட்சிகள் ஓடுகின்றன. மயக்கம் தெளிந்து ஓர் புதிய இடத்தில் விழிக்கிறான் பக்கத்து அறையில் அவன் காதலி வாந்தி எடுத்து கொண்டிருப்பது தெரிகிறது. அவன் பார்த்து கொண்டிருக்கும் போதே அவனருகில் இருந்த மூட்டை துள்ளி குதிக்கிறது. அந்த மூட்டையில் இருந்து மனிதனை ஒத்த ஒரு உருவம் வெளிவருகிறது. ஆம் அவன் மனிதன் தான் ஆனால் இரண்டு பாதங்களும் வெட்டப்பட்டு , நாக்கு அறுக்கப்பட்டு ,  கைகளில் முக்கிய மூன்று விரல்கள் வெட்டப்பட்டு மனித உருவமே சிதைக்கப்பட்ட மனிதன். அவன் தன் வெட்டப்படாத விரலை கொண்டு அருவெருப்பான முறையில் நாயகியை அழைக்க அவள் தான் எடுத்த வாந்தியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வருகிறாள். பல நாள் பழைய சோத்தயே பாக்காதவன் பந்திக்கு பாய்வது போல் பாய அவள் அந்த வாந்தியை கிழே வைக்க நாக்கில்லா தன் வாயால் அவன் அதை  வாய் வைத்து உறிந்து குடிக்க..," ஹீரோயின் வாந்தி எடுத்தாங்களோ இல்லையோ எனக்கு கொமட்டிட்டு வந்துடுச்சு..,

           பிரபல ஜப்பானிய இயக்குநர் Takishe Mike இயக்கிய முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. மேற்கூறிய காட்சிகளை தொடர்ந்து வரும் 10 நிமிட டார்ச்சர் சீன் ரொம்ப ஃபேமஸ். டார்ச்சர் என்றதும் ரத்தம், கொடூரம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் வெறும் குண்டூசியை வைத்தே டரியல் காட்டி இருப்பார்கள். அந்த வாந்தி காட்சியை மட்டும் பொறுத்து கொண்டால் ஒரு அட்டகாசமான திரில்லர் பார்க்கலாம்.இங்கே கொடுக்க போகும் லிஸ்ட்டில் நான் சிபாரிசு செய்யும் ஒரே படம் இது தான்.

Seven Pounds : 

        படம் பார்ப்பவனின் சட்டையை கொத்தோடு பிடித்து  திரைக்குள் இழுத்து கண்ணுக்குள் க்ளிசெரின் ஊத்தும் கொடுமையை அனுபவித்தது உண்டா ?. ஒரே ஒரு முறை அனுபவித்து பார்க்க விருப்பமா ? ஆம் எனில் இந்த படத்தை பார்த்தே தீர வேண்டிய பட பட்டியலில் உடனடியாக இணைத்து கொள்ளவும்..,  படத்தோட கதை என்னன்னா கொஞ்ச வருஷத்துக்கு முன்னால முரளி மற்றும் லைலா நடித்து வெளிவந்த "காமராசு" என்ற திரைப்படம் நினைவிருகிறதா இல்லைன்னாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. ரெண்டுமே கிட்டதட்ட ஒரே கதை தான் காமராசுல விசுவாசத்துக்காக முரளி தன் உடம்புல இருக்குற அத்தனை பாகத்தையும் தானம் குடுத்துட்டு மர்கயா ஆகிடுவார். இந்த படத்துல வில் ஸ்மித் குற்ற உணர்ச்சியால் தானம் குடுத்துட்டு போய் சேர்வார்.

      Persuit of Happyness படத்தின் இணை மறுபடி இணைந்த படமென்பதால் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. படம் ஆரம்பித்த கணம் முதல் இயக்குநரும் வில் ஸ்மித்தும் நம்மை இம்சிக்க தொடங்கி விடுகின்றனர். செயற்க்கையான காட்சிகள் , மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு, வலிந்து திணிக்கப்பட்ட செண்டிமெண்ட் காட்சிகள், ஒரு பாடாவதி ட்விஸ்ட் என சகிக்கவே முடியாத படமாக இருக்கிறது. டி.வி சீரியல்களை அழுது கொண்டே பார்க்கும் வழக்கம் உள்ளவர் எனில் தவறாமல் பார்க்க வேண்டிய கண்ணீர் காவியம்.

மனம் கொத்தி பறவை :


           ராஜா, அமுதே, தீபாவளி போன்ற கொடூர மொக்கை படங்களின் இயக்குநர் எழிலின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்திருக்கும் படம் என நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. நகைச்சுவை படம் என்ற விளம்பரம் பார்த்து ஏதேவொரு குருட்டு தைரியத்தில் படத்துக்கு போன என்னை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கதற கதற மொக்கை போட்டனர்.

       படத்தில் வரும் ஜோக்குகெல்லாம் இயக்குநருக்கே சிரிப்பு வந்து இருந்தால் ஆச்சர்யம். படம் தான் மொக்கை ஹீரோயினையாவது சைட் அடிக்கலாம்ன்னு பாத்தா ஏதோவொரு ஆண்டி ஹீரோயினாய் போட்டு கடுப்பேற்றி விட்டனர் பட்ஜெட் ப்ராப்ளம் போல. சீரியஸான காட்சியா நகைச்சுவை காட்சியா என நடித்தவர்களுக்கே தெரியாத காரணத்தால் பார்க்கும் நமக்கு புரிவதற்க்கான நியாயம் கிடையாது. சமீபகாலத்தில் இப்படி ஒரு கேனத்தனமான படத்தை பார்த்ததில்லைன்னு பொய்லாம் சொல்ல மாட்டேன் அடிக்கடி பாத்துட்டு தான் இருக்கேன். நெஞ்சுல தெடமும் திராணியும் இருப்பவர்கள் மட்டும் பார்க்கவும்..,
[ Read More ]